மூச்சு விட மறந்தேன் உன்னாலா.
பேச்சு வார்த்தை நடத்தும் மின்னலா..?
பேச்சு இழந்து போய் கிடக்கிறேன்,,,
அவள் வருவாளா..?
அங்கம் ஜொலிக்கும் திங்களா..?
தங்கம் பூசிய சிலை கல்லா..?
வில்லங்கம் பிடித்த புல்லாங்குழலா..?- அவள்
உள்ளங்கையில் உலக ரேகைகளா..?
எனது இரவை குடிக்கும் பார்வைகளா..?
நான் அறையப் பட்டது-உன்
இதயம் எனும் சிலுவையிலா..?
ஒரு நாளா..?
இரண்டு நாளா..?-நீ
என் வானை வசீகரிக்கும் பெண்ணிலா.
என்றைக்கு உன்னை கை பிடிக்கிறேனோ..?-அன்று
என் இதயக் கோவிலில் திருவிழா.