Tuesday, February 1, 2011

கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்


படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்
பாடலாசிரியர்; கவிஞர் யுகபாரதி

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)




பாடல் விளக்கம்


திரைபடத்தின் சூழலுக்கேற்ப சுதி சேர்க்கப் பட்ட யுகபாரதியின் சோகவரிகள் அவை...
சோகத்திலும் தத்துவங்களை புகுத்தும் திறன் பரட்டுவதற்குரியது. அருமையான இசை தோரணம்.வரிகளை வசியப்படுத்தும் இசை. வித்தியாசாகரின் தனியொரு திறமையின் தோற்றம் இந்தப் பாடல் இசை.

மொழி அறிந்தேன் நீ பேசுவதைப் பார்த்து....
நான் வழி அறிந்தேன் நீ போகும் பாதை பார்த்து...
உன் அருகில் இருக்கும் போது தான் நான் யார் என்பதையே அறிகிறேன்.
எனது விசை உன் விழியில் தான் என்று உணர்ந்தேன்...
இத்தனையும் அறிதேன்,,,
அதோடு சேர்த்து உன் பிரிவின் தாக்கத்தில் வழி என்பது இது தான் என்றறிந்தேன்.


இப்போது தான் பூக்களின் வாசத்தையே உணர ஆரம்பித்தேன்...அதற்குள் பூங்கவையே காணவில்லை எங்கு போனதோ..?
வானம் இப்போதுதான் என் வசம வந்தது...அதற்குள் நிலவை காணவில்லை...எங்கு போனதோ..?
தென்றலாய் வருடி விட்டு...தென்படாதே தூரமாய் சென்று விட்டால்.
சலிக்காமல் பேசிவிட்டு...சத்தமே இன்றி ஒளிந்துவிட்டால்.
என் வாழ்க்கையை டதேடித் தந்து விட்டு...நீ எங்கு பொய் தொலைந்தாய்..?


கண் இமையில் ஒரு கனவு ஊஞ்சலாடுகிறது...அவ்வேளையிலே ஆழ்மனது உண்மை என்ன என்பதை அறிய விரும்புவதில்லை.
உறக்கம் கூட இனி இனிக்கப் போகிறது...இன்னும் உன் மடியை தேடுவது நியாயமில்லை.
மேகம் தன்னை விட்டுப் பிரியும் என வானம் ஒரு போதும் நினைத்ததில்லை...
காலம் நமக்காய் போட்டிருக்கும் வரம்புகளை தாண்டி யாரும் செல்வதில்லை.
இந்த வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நமது கையில் இல்லை.

நன்றி.

படைப்பு : சுவரன்

இன்னொரு நாள்...

முன்னொரு நாள் முன்னோர் சொன்னார்...
முந்தி வா என்று.
பின்னொரு நாள் பின் தங்கி விட்டோம்...
பந்தியின் கடைசியிள் நாம் இன்று.

இன்னொரு நான் நமக்கு வாய்க்கும்,,,
வானை தொடுவோம் மண்ணை வென்று.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

தோல்வியை தழுவிக் கொள்ளும் மனம்...
வாழ்வில் அனைவருக்கும் வரணும்.

எனக்கு மாத்திரம்.

என் கண்களில் அகப்பட்ட அழகு சித்திரம்...
இன்னும் அழியாது என் நெஞ்சில் பத்திரம்.
சறுக்கல் என்பதையே சந்தித்திராத எனது சரித்திரம்...
என்னை தோல்வியை தழுவச் செய்தது பெண் எனும் அந்த கதா பாத்திரம்.

அவள்...
எனக்கு மாத்திரம்.

படம்:நிலாவே வா
பாடல் :நீ காற்று நான் மரம்
பாடகர்:ஹரிஹரன் ,கே.எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர்:வித்யாசாகர்
பாடல் வரிகள்:வைரமுத்து


பாடல் வரிகள்:


பல்லவி :

நீ காற்று நான் மரம் என்ன
சொன்னாலும் தலையாட்டுவேன்


நீ காற்று நான் மரம்...நீ சொல்லும் விதம் நான் செயல்படுவேன்

நீ மழை நான் பூமி எங்கு
விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

மழையாய் நீ விழும் மண்ணை நான்...நீ விழும் இடம் என் கைகளாக இருக்கும்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும்
வரைதான் நான் இருப்பேன்


விடியும் வரை தான் வின்மீனுக்கு வேலை...நீ இருக்கும் வரை தான் எனக்கு நாளை.



சரணம் 1

நீயலை நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

வலி தந்தாலும் கரை போல அதனை தாங்கிக்கொல்வேன்.

நீ உடல் நான் நிழல் நீ விழ
வேண்டாம் நான் விழு
வேன்

உனது தேகம் மண்ணில் விழக்கூடாது...நிழலாய் நான் இருக்கிறேன் விழ.

நீ கிளை நான் இலை உனை
ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்

விழுந்த இல்லை விளையாது...உன்னை பிரிந்த எனது உயிரும் வாழாது.

நீ விழி நான் இமை உன்னை
சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்

உன்னை சேரும் வரை நான் விழி மூட காத்திருக்கும் இமையை ஆவல் கொள்வேன்.

நீ சுவாசம் நான் தேகம் நான்
உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

நீ மட்டுமே என் உயிரின் மீது தொட உரிமை உள்ளவன்...


சரணம் 2

நீ வானம் நான் நீலம் உன்னில்
நானாய்க் கல்ந்திருப்பேன்

வானிடமிருந்து பிரிக்க இயலாத நீளம் போல...உன் உள்ளே சேர்ந்திருப்பேன்.

நீ எண்ணம் நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

வார்த்தைகள் என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பு...வார்த்தை வெளிவரும் போது நான் எண்ணமாய் பிரதிபளிப்பேன்.

நீ வெயில் நான் குயில் உன் வருகை
பார்த்துத்தான் நானிசைப்பேன்

வெய்யிலின் போது தான் குயில் கூவும்...ஆகவே உன் வருகையினால் தான் நான் களிப்படைவேன்.

நீ உடை நான் இடை உன்னை
உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்

எத்தருனமும் என் இடை போர்த்தும் உடை போல உன்னை அணிந்திருப்பேன்.

நீ பகல் நான் ஒளி என்றும்
உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பே
ன்

பகலையும் வெளிச்சத்தையும் பிரிக்க முடியுமோ..?அது போல உன்னோடு ஒன்றியே இருப்பேன்.


விமர்சனம்

வைரமுத்துவின் வைர வரிகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு சான்றாக இந்தப் பாடல் அமைகின்றது. கற்பனையை கடல் அளவு கசியவிட்டிருக்கிறார் கவிஞர்.