Friday, February 18, 2011

எது நாகரீகம்..?

எது நாகரீகம்..?
புதுமையா...
இல்லை,,,
வாழ்வியல் கூறுகளின் வறுமையா..?
இது என்ன பெருமையா..?
மழைப் பெய்தாலும் மருத்துப் போய் நிற்பதற்கு,,,
நாம் என்ன எருமையா..?

கைக்குட்டை என்பது நாகரீக உடையாம்,,,
நம் இனப் பெண்களுக்கு.
மேல் சட்டை அணிந்தால் போதும் என்ற நாகரீகம...
யார் கற்று கொடுத்தார் நமக்கு..?
அழகு என்பது ஆடை குறைப்பில் இல்லை.
வனப்பு தொடை காண்பிப்பில் இல்லை.
அத்தனையும் நம் அடக்கத்தில் இருக்கு.

மஞ்சள் பூச மணிக்கணக்காகுமா..?
பெண்மைக்கு அழகு அதை விட ஏதம்மா...?
நெற்றியில் திலகம் இட்டால் அது பாரமா..?


பூமுடித்தால் மாது...அவளுக்கு நிகர் எது..?
இன்று,,,
மங்கை கூந்தல் மலர்களை மறந்தது.
தலைவிரி கோலமாய் விரிந்தது.
இப்படியே போனால்,,,
பேய்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாட்டினை எப்படி தேடுவது..?

சேலையில் எதற்கு சிக்கனம்..?
கண்டவன் பார்க்க ஏனோ,,,
சன்னல் வைக்கணும்..?
உடலை மறைக்க தானே உடைகள்...
பெண்களே,,,
கொஞ்சம் யோசிக்கணும்.

நாகரீகம் என்ற பெயரில் ஆபாச நாடகம் வேண்டாம்.
அயல் நாட்டின் மோகம் அனுசரிக்க வேண்டாம்.
காலம் மாறட்டும்...
கலாச்சாரம் மாற வேண்டாம்...
எக்காலமும் ஏற்கக் கூடியது தான் எங்கள் கலாச்சாரம்.
அது தான் நம்மை அடையாளம் காண்பிக்கும் ஆதாரம்.

அவளுக்கு மட்டுமே...

போனால் இதயம் திரும்பாது...
வேறொரு இதயம் பொருந்தாது.
அவளை தவிர இந்த இதயம்,,,
வேறு யாரையும் விரும்பாது.

நிலையில்லா காதல்

காதலும் கனவும் ஒன்று...
அது கலைந்திடும் நாள் உண்டு.
காதலும் வானிலையும் ஒன்று...
அது நிலையில்லையே இன்று.