Thursday, December 16, 2010


வீரனின் கைகள் ஒருபோதும் விழுந்ததில்லை...
வீசிய வாள் ஒருபோது கவிழ்ந்ததில்லை...
போர்க்களம் புதயுண்டாலும்,,,
அவன் படை களம் தலை சாய்வதில்லை.

பொழிந்ததில்லை வானம்...
விழும் இடம் பார்த்து.
வீசியதில்லை காற்று...
வசதியான இடம் பார்த்து.
மனிதனின் விருப்பம் மட்டும்,,,
எல்லாமே பார்த்து பார்த்து.

கழுதையை போனக் கதை


கதை தெரியுமா..?
தமிழன் எல்லாம் கழுதைகளாய் போனக் கதை தெரியுமா..?
அடிக்கப்பட்டு,,,-பின்பு
அடக்கப்பட்டு.
ஒடுக்கப்பட்டு,,,-பின்பு
ஒதுக்கப்பட்டு.
இன்றும் அடிமைகளாய் வாழும் கதை தெரியுமா..?
இதை தெரிந்து மட்டும் என்னவாகப் போகிறது..?
உணர்ச்சிகலெல்லாம் உலர்ந்து விட்ட உடலுக்கு தன்மானம் அவசியமாகுமா..?
அடிமையாய் வாழ்ந்தே பழகி விட்டது நமக்கு...
அடிப் பணியாமல் இருக்க முடியுமா..?
தலை குனியாவிட்டால் தூக்கம் வருமா..?