Friday, April 17, 2009

மேக பூக்கள்


வானம் விட்டெரிந்த மேக பூக்கள்...
ஒன்றல்ல இரண்டல்ல,,,
எண்ணிலடங்கா பூக்கள்.
அவை விழுந்ததும் தெரிக்கும்...
ஆகாய கற்கள்.

கண்ணாடி மழை சாரல்...
வள நிலங்களை நனைக்குது தூரல்.
இந்த வினோத வரங்கள்,,,
இறைவன் அனுப்பிய ஏவல்.

கார்மேகம் கனம் தாங்காமல் விழுவதனால்,,,
மண் பாகம் காயாமல் குளிர்கிறது.
தூவானம் துள்ளி வந்து தவழ்வதனால்...
பூங்காவனம் குளித்து மகிழ்கிறது.

மண்ணை நனைக்கும் வெள்ளி மணி துளிகளே...
வின்னை துளைத்து வந்து தீர்த்தம் போடுங்களே.
யாரும் இதுவரை சொல்லாத உங்கள் பெறுமையை சொல்கிறேன் கேளுங்களே.
கேட்காமலேயே எங்களுக்கு வரம் தருவதால்,,,
நீங்களும் எங்களுக்கு கடவுளே.

மழலை லீலைகள்



முடிந்தவை எல்லாம் வாழ்க்கை குறிப்பில் சரித்திரம் ஆகுமே...

கல் வெட்டுகள் போலே.
கடந்தவை எல்லாம் பத்திரமாக இதய பதிவேட்டில் அடங்குமே...
இசைத் தட்டு போலே.
மறையாது...
ஆழியாது...
பதிந்து விட்ட நினைவலைகள்,,,
என்றாவது ஒரு நொடி இலேசாக இறக்கை விரித்து விட்டுப் போகும்...
சிந்தையிலே.

சில நேரம் சிரிக்கத் தோன்றும்...
சில நேரம் அழுதிட தோன்றும்...
அந்த பருவ கால ஞாபகங்கள் நம்மை நினைக்கச் சொல்லிக் கொண்டே இருக்கும்என்றும்.

பேசிய மழலையின் அர்த்தம் புரியாது...
ஆடிய ஆட்டத்தின் முடிவு அறியாது...
கண்ட காட்சிகளின் சாட்சி தெரியாது...
இந்த உணரா பருவம் இல்லையென்றால்,,,
மனித வாழ்க்கை நிறையாது.

ஏன் வந்தோம்..?
எதற்க்கு வந்தொம்..?
என்ற வினாவையும் விதைக்காத,,,
பதிலையும் புதைக்காத பருவம்...
ஒரு விசித்திரமான விளையாட்டு மைதானம்.

கள்ளம் இல்லா வெள்ளை மனம்...
கபடம் இல்லா பிள்ளை மனம்...
எங்கு வாங்கினோம்..?
குழந்தை பருவம் என்பது,,,
மகிழ்ச்சி மொட்டுகள் மட்டுமே பூக்கும் பூங்காவனம்.

கவலைகள் இல்லை...
கலக்கம் இல்லை...
கனம் அறிந்த கண்ணீருக்கு அவசியம் இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லை...
எதிர்ப்புகள் இல்லை...
எதிரே நிற்பது எதுவும் எதிரிகள் இல்லை.

பறந்தாடிய பருவம்...
பருவ காற்றின் சூழ்ச்சியால் பறந்தோடிய மாயம்.
நெஞ்சை விட்டு மறந்தோடுமா..?
இது தான் வாழ்க்கை...
இது தான் சொர்கம்...
அது தான் மீண்டும் திரும்பி வருமா..?
காலம் தான் எனக்கு அந்த பழைய வாழ்க்கயை திருப்பி தருமா..?

தவன்... கிறேன்...


படித்தவன் எழுதுகிறேன்...

பொங்கி வரும் அவள் செந்தமிழ் இதழ்களைப் படித்தவன்,,,
இன்று கவிதை எழுதுகிறேன்.

வரைந்தவன் இரசிக்கிறேன்...
கற்பனையில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தவன்,,,
அதே ஓவியம் என் முன்னாடி நின்ற போது கண் அசைக்காமல் இரசிக்கிறேன்.

பார்த்தவன் வேர்க்கிறேன்...
இது வரை கண்டிராத அவள் அழகை பார்த்தவன்,,,
விழிகள் வேர்க்கிறேன்.

மறந்தவன் நினைக்கிறேன்...
மண் மீது நான் வாழ்ந்ததையே மறந்தவன்,,,
அவள் என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பதை மட்டும் அடிக்கடி நினைக்கிறேன்.

இறந்தவன் பிறக்கிறேன்...
அவளது முதல் பார்வையில் மூச்சு திணறி போய் இயந்தவன்,,,

மறுபடி ஒரு பார்வை பார்த்தால்...
மீண்டும் பிறக்கிறேன்.

காதலித்தவன் பேதலிக்கிறேன்...
அவள் முகவரி அறியாமல் அவளை காதலித்தவன்,,,

என் முகவரி தெரியாமல் இன்று பேதலிக்கிறேன்.

"மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...




"குரங்கு கையில் கிடைத்தபூ மாலை போல"

இது பழய உவமை.
"
மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...
இது புதுமை.

உலகம்,,,
அழகான உருண்டை வீடு...
அதிலே எத்தனை எத்தனை கூடு.
இறைவன் இரவல் தந்த இருப்பிடம் அது.
அதனை அலங்கரிப்பதும்...
அதன் அழகை பறிப்பதும்...
மானிடா உன் பாடு.

அதன் ஒவ்வொரு சீற்றத்துக்கும் நீ தான் தர வேண்டும் இழப்பீடு.
வானம் என்னும் வெள்ளி தகடு...
பூமி பந்துக்கு அதுவே முக்காடு.
அது அனுமதி தந்தால்,,,
நீ ஆனந்த நீராடு.
அந்த மேக கருவறையும் இன்று கதி கலங்கி போய் நிற்கிறது கண்ணீரோடு.

செயற்க்கையை உருவாக்கினாய்...
உன் சௌகர்யத்துக்கு.
இயற்க்கையை அதற்கு இறையாக்கினாய்...

உன் சந்தோஷத்துக்கு.
நாளை இந்த உலக வழக்கை கொஞ்சமாவது நினைத்து பார்த்தாயா..?
வினை செய்தவனே,,,
பலன் வந்து சேறும் உனக்கு.

உயர கட்டிடன்கள் உயர்த்தினாய்...
காடுகள் பலியானது.
காற்றின் உஷ்ன தன்மை உயர்ந்தது.
சொகுசாக செல்ல வாகனங்க்கள் உற்பத்தி செய்தாய்...
அது புகையை துப்பியது.
காற்றோ விஷ வாயுவை கக்கியது.

வானத்தில் ஒரு வாசல்...
"
ஓசொன்படலத்தின் விரிசல்.
யார் போட்டது..?
இயற்க்கையின் விதியா..?

இல்லை,,,
மனிதனின் சதியா..?

சுனாமி...
பூகம்பம்...
சூராவளி...
உயிர்களை பலி கேட்டது.
இயற்க்கையின் சதியா..?

மனிதனின் கதியா..?

சுயநலம் நமக்கு வளம் இல்லை மானிடா...
நீ  இயற்க்கை அழிக்க இங்கே மரண ஓலம் அதிகரிக்கும்பாரடா.

நீ பிறந்த மண்ணை நீ மதிக்கா விட்டால்
மானிடா...
இயற்க்கையும் நம்மை பழிக்கும்...

இயற்க்கையும் நமது தோழன் தான் என்று புது உறவு கொடு,,,

இயற்க்கை உன்னை கட்டி அனைக்கும்.

உலகத்துக்கு நன்மை பயக்கும்.

உதிராத உறவு




நட்பு...
அந்த சொல்லுக்கு எத்துனைச் சிறப்பு.

சினேகம்...
அது சொர்க்கத்தில் உருவான ஒரு வேதம்.

தோழமை...
அது இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும் கட்டாயம் உருவாக்கிக்கொள்ளும் உரிமை.

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் தான் மோதி செல்லும்...
சொந்தம் கூட சொல்லாமல் கொல்லாமல் ஒளிந்து கொல்லும்...
நட்பு என்பது அப்படி அல்ல,,,
குழந்தை பருவத்திலும் விளையாடி செல்லும்...
அரியாத வயதிலும் அலையாய் மோதிச் செல்லும்...
வாலிப வர்கத்திடம் விரும்பி அறும்பி கொல்லும்...
முடி நரைத்தாலும் நட்பு மட்டும் நரைக்காமல் இன்னும் நன்றியை மெல்லும்...
எமனிடம் சென்று முறையீடு செய்து,,,
மரணத்தையும் வெல்லும்.

இயற்கையே எனது இருக்கை.



நீல வான மேகங்களே...
எனது நிலைமை அறிந்து சொல்லுங்கள்.
காற்றோடு காத்தாட காலங்காத்தாலயே சென்றது,,,
இன்னும் வரவில்லை.

குளிர் ஆடை போர்த்திய ஓடைகள்...
என் கணவை கண்டு பிடித்து சொல்லுங்கள்.
உறக்கத்துக்கு வாக்கப்பட்டு அது போனது,,,
எந்த தகவலும் இல்லை.

கண்கள் எல்லாம் மயங்கி போகும் அளவுக்கு கண்டாங்கி சேலை கட்டி நடந்துப் போகும் அந்தி சூரியனே...
எனது தற்போதைய நிலவரத்தை அறிந்து சொல்லுங்கள்.
அந்தி சாயும் நேரத்தில் நொந்து எங்கோ போனது,,,
ரொம்ப நாளாய் அங்கிருந்து மடல் கூட வரவில்லை.

இயற்கைகளே...
உங்களோடு நான் சமாதியாகி விட்டேன்.
எனக்கும் என் கவிதைகளுக்கும் நண்பர்கள் நீங்கள் தான்,,,
மனிதர்கள் இல்லை.

நட்பின் நெறி




நட்பு ஒரு நல்ல கவிதை...
பேனா முனையில் அது உறங்கிக் கொண்டிருக்கும் வரை.
அட்சரமாய் வந்து விழுந்து விட்டால்,,,
அது குருடன் கையில் கிடைத்த நிலை.

நட்பு ஒரு வீணை...
எந்த கரங்களாவது மீட்டி கொண்டிருக்கும் வரை.
மீட்ட யாரும் இல்லாத வேளையில்,,,
அதன் இருப்பிடம் வீட்டில் ஒரு மூலை.

நட்பு ஒரு பரவச பூக்களின் தோட்டம்...
அது வாடாத வசந்த நாள் வரை.
வாசம் அங்கே குறைந்து விட்டால்,,,
நட்புக்கும் நாளை இங்கில்லை.

நட்பு என் உயிர் நாடி...
நட்பு என் சுவாசம்...
இதன் உண்மை எல்லாம் அதை உறைப்பவனின் வாய் பேச்சு வரை.
இதயத்தை திறந்து பார்த்தால் எச்சில் கறை.

அன்பே நீ எனக்கு,,,



அன்பே நீ எனக்கு,,,

மூங்கிலில் நுழைந்த சுக ராகங்கள் போல...

கோடையில் விழுந்த மழை துளி போல...

இருட்டுக்கு ஒலி வீசும் நிலவு போலே...

வெய்யிலுக்கு விரிந்த விருட்சம் போல...

தாகத்துக்கு தட்டுப் பட்ட தெப்பக் குளம் போல...

கண்ணீருக்கு வாக்கப் பட்ட கைக்குட்டை போல...

உழைப்பாளிக்கு ஒதுக்கப் பட்ட ஒரு நொடி உறக்கம் போல...

தத்தளிப்பவனுக்கு தென் பட்ட மிதவை போல...

பிச்சைக்காரன் தட்டில் விழுந்த சிவப்பு நோட்டு போல...

என் உடலுக்குள் ஊடுருவும் உயிர் போல...
இல்லை ஒரு ஜீவன்,,,
அன்பே...
உன்னைப் போல.

அகிம்சை அடுப்பு...



அகிம்சை அடுப்பு...
அதில் அமைதி எனும் நெருப்பு.
சத்தமில்லாமல் உலையில் வேகட்டும் பருப்பு.
மனிதா அறிந்து கொள் உனது பிறப்பு...
மனிதனாய் பிறந்து விட்டாளோ,,,
மற்ற உயிர்கள் எல்லாம் சாதா என்ற நினைப்பு.

கடல் அலையின் சத்தத்தில் கூடே இன்னும் சுனாமியின் மரண ஓலம் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறது...
கிராமத்து மண்ணில் கூட இன்னும் சாதி மதச் சண்டையால் சிந்திய இரத்தவாடைகள் இன்னும் என்னை மூச்சடைக்க செய்கிறது.

பூக்களை கூட அமைதியாக பூப்பதை விரும்பும் நமக்கு...
சிற்றுயிர்களை துடிக்க துடிக்க பலி கொடுக்கும் ஆர்வம் எதற்கு..?
கணவன் அடித்தால் ஏற்றுக் கொல்லும் மனப் பக்குவம் மனைவிக்கு...
ஒரு சிறு எறும்பு கடித்தாலோ ஏனோ அதன் மீது கொலை வழக்கு.

உயிர்கள் என்பது பெரிதேனும்...
அதுவே சிரிதேனும்...
உயிர் என்பது சமம் தானே.

உயிர்களை மதிப்பொம்...
வன்முறை வெண்டாம் என்ற சட்டம் விதிப்போம்...
பூக்களும் ஜனநாயகம் பேசுவதற்க்கு அனுமதி அழிப்போம்.

இரயிலில் ஒரு மயில்...



விரைவு இரயிலில் விரைவாக ஏறி அமர்ந்தேன்...
துணி பையை இரும்பு தூணோடு அமர்த்தி விட்டு சாய்ந்தேன்.
குழந்தையின் அழுகை சத்தம் ஒரு புரம்...
இரயில் நகரும் சத்தம் மறு புரம்...
கலைப்பின் கருணையால் அந்த சத்தத்திலும் கண் அசந்து விட்டேன்.

தூக்கம் கலைந்து எழுந்து சற்று நிமிர்ந்தேன்...
ஒரு தாமரை தோட்டமே என் முன் அமர்ந்திருந்ததாய் உணர்ந்தேன்.

ஸ்தம்பித்துப் போனது என் இதய ஆலை.
தப்பிக்க முயன்றது கண்கள் அந்த வேளை...

பெண்களில் எந்த வகை பெண் அவளோ..?
பூவின் கருவில் பிறந்திருப்பாளோ..?
வானவில் பரம்பரையிலிருந்து வந்திருப்பாலோ..?
பிரம்மனும் கடும் பயிற்சி எடுத்து வடித்த பிரம்மோவியமோ..?

எந்த ஸ்டொபில் ஏறிய பறவையோ..?
என் இதயத்தை அந்த இரயிலின் வேகத்தை விட பல மடங்கு ஓட வைக்கிறாள்.

கண்களில் ஒரு வெளிச்சம்...
வைட்டமின் 'D' சூரியனிடமிருந்து கிடக்கும் என்று படித்ததாய் ஞாபகம்.
இன்னும் எத்தனை எத்தனை வைட்டமின்கள் மிச்சம் இருக்கிறதோ,,,
அத்தனையும் அந்த நொடி கண்களில் உதயம்.

அவள் தோழியோடு அளவளாவிய போது அரங்கேறியே அற்புத வார்த்தைகள்...
காதுகளுக்கு இனிய இசை கச்சேரிகள்.
அந்த சர்க்கரை சொற்களுக்கு இல்லை ஈடானகவிதை வரிகள்.

என் ஆயுலின் நாழிகைகள்
அவளை பார்த்துக் கொண்டே காலங்கள் முடிந்திட கூடாதா.

அக்கரையில் அவள் இருக்க அக்கரையாய் பார்க்கிறது இக்கரையில் என் கண்கள்.
எக்கரையில் இறங்க போகிறாளோ,,,
மனம் அக்கரையாய் கேட்கிறது.

அவள் இறங்கக் கூடிய ஸ்டோப் வந்தது...
இறங்கினாள்,,,
என் இதயமும் உடன் இறங்கியது.
அன்று முதல் நான் அதை தேடுகிறேன் கிடைக்க மாட்டேங்குது.

எல்லா புகழும் உனக்கே.




(இசை புயல் a.r.ரஹ்மன் ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பெருமையில் ஒரு தமிழன் என்ற முறையில் நான் வாழ்த்த விளைந்த வரிகள்)

அண்டமே அசந்து பார்க்கும் 'ஆஸ்கர் அரசனே'...
ஆஸ்காரயே அசர வைத்த உன்னை,,,
ஆஸ்கர் அரசன் என்று அழைக்காமல்...
வேறு எப்படி அழைப்பது?

இசைக் கலைஞனே,,,
நீ தொட்டது தகரம் அல்ல...
சிகரம்.
அதுவும் ஒன்று அல்ல,,,
இரண்டை சுமந்து நின்றது உனது இரு கரம்.
நீ உண்மையில் விருதுக்ள் காய்க்கும் விசித்திர மரம்.

தென்றலாக தவழ்ந்து இன்று புயலென எழுந்து நிற்கும் இசைப் புயலே...
உன் திறமைக்கு இன்று தான் பெருமை சேர்க்கப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
உன் திறமை இன்று தான் திரை வானில் திரை போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.

ரோஜாவில் தொடங்கி இன்று வரைக்கும் ஓர் இசை ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டிருப்பவனே...
இன்று இந்த உலக மண்ணிலே உனக்காக ஒரு சரித்திரமே எழுதப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
சரித்திரமே உன்னை தன் பதிவேட்டில் எழுதிக் கொண்டது.

உலக அரங்கில் நீ விருதுகள் வாங்கினாய்...
நாங்கள் எல்லாம் உன்னால் பெருமை கொண்டோம்.
அதே அரங்கத்தில் நீ தமிழில் முழங்கினாய்...
தமிழே பெருமை கொண்டது.

இசைக்கு புகழ் என்று மற்றொரு பொருளும் உண்டு...
அந்த புகழுக்கே புகழ் சேர்த்த உன்னை...
இசை தமிழில் குளிப்பாட்ட காத்திருக்கிறது உலகமே திரண்டு.

இவ்வளவு பெருமையை பெற்று விட்டு...
எவ்வளவு பொறுமை உனக்கு.
உனது திறமைக்கு,,,
போதாது இந்த ஒரு விருதளிப்பு.

ஆங்கில நாளிதழ்களும்,
வார இதழ்களும்,
விருப்பப்படி எழுதின...
நீ 'இந்தி' திரை இசை உலகைச் சார்ந்தவன் என்று.
சவுக்கடி கொடுத்தாய் அந்த ஊடகங்களுக்கு,,,
உன்னை வளர்த்தது தமிழ் திரை உலகம் என்று...
அந்த மேடையில் நின்று.

ஆஸ்கார் தமிழனே,,,
நீ சொன்னது ஒரே ஒரு வரியாக இருக்கலாம்...
ஆனால் அந்த ஒரு வரி தான் இந்த உலக தமிழர்களுக்கு முகவரி.

இசை இளவரசனே...
நீ நடந்து வரும் பாதை எங்கிலும் முரசு கொட்டும்.
கலைவானியே கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதம் உன் வீட்டு கதவை தட்டும்.
இந்த நூற்றாண்டு அல்ல...
இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னை பற்றி தான் தமிழ் உள்ளங்களின் இதழ்கள் முணுமுணுக்கும்.

புனிதமான பூக்கள்




பூக்களே...
ஏன் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் முக ஒப்பணை செய்துக் கொள்வதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் என்றுமே வாசம் வீசுகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் வாசனை திரவியம் பூசிக்கொள்வது இல்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் வண்ண வண்ணமாய் விளைகின்றீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் நீங்கள் குடை பிடிப்பதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய் பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் ஊமையாய் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று மற்றவர்களை புறம் பேச உங்க்களுக்கு அவசியம் இல்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உதிர போகும் நாளை நீங்கள் நினைப்பதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் எங்களால் போற்ற படுகிறீர்கள் தெரியுமா..?
உங்களைப் போன்று புனிதமாய் நாங்கள் கொஞ்சம் கூட இல்லை