Monday, February 28, 2011

இதயக் கோவிலில் திருவிழா

மூச்சு விடும் தாஜ்மஹாலா...?
மூச்சு விட மறந்தேன் உன்னாலா.
பேச்சு வார்த்தை நடத்தும் மின்னலா..?
பேச்சு இழந்து போய் கிடக்கிறேன்,,,
அவள் வருவாளா..?

அங்கம் ஜொலிக்கும் திங்களா..?
தங்கம் பூசிய சிலை கல்லா..?
வில்லங்கம் பிடித்த புல்லாங்குழலா..?- அவள்
உள்ளங்கையில் உலக ரேகைகளா..?
எனது இரவை குடிக்கும் பார்வைகளா..?
நான் அறையப் பட்டது-உன்
இதயம் எனும் சிலுவையிலா..?

ஒரு நாளா..?
இரண்டு நாளா..?-நீ
என் வானை வசீகரிக்கும் பெண்ணிலா.
என்றைக்கு உன்னை கை பிடிக்கிறேனோ..?-அன்று
என் இதயக் கோவிலில் திருவிழா.

No comments: