Thursday, February 10, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

குரங்குக் குட்டிகள் தனது தாயின் மடியில்...
மனிதனோ,,,
குழ்ந்தை பெற்று குப்பைத்தொட்டியில்.

வாடா தோழா...

வாடா தோழா....

வானம் தொட்டு வரலாம்.

வாடா தோழா...

நிலவை மண்ணில் நடலாம்.


வாழ்க்கை அது....

புது வானவில் வண்ணங்களே.

போகும் பாதை...

அது இன்பத்தின் அங்கங்களே.


உன் வாழ்க்கை...

உந்தன் கையிலே.


இன்பங்கள் அங்கும் இங்கும் தேடியே...

இன்றை தொலைத்தவர்கள் கோடியே.

கண்களை கண்ணீரால் மூடியே...

நம் வாழ்க்கை முடிந்தது இப்படியே.


இந்த வாழ்க்கை...

இன்பத்தின் பூந்தோட்டம் தானே.

இந்த பூமி...

சொர்கத்தின் மருபக்கம் தானே.

என்றும் உல்லாசம் தான் வேண்டுமே...

சிறு சந்தோஷங்கள் போதுமே.


நேற்று என்ற வார்த்தை தூரம் போடு...

இன்று மண்ணில் என்ன இருக்கு தேடு...


காற்றும் கடலும் கூட நடக்கும் உன்னோடு

மெதுவாக ஓடும் மேகக் கூட்டங்கள்...

என்னோடு மோதி செல்ல வாருங்கள்.

அழகாக கொட்டும் அந்த அருவிகள்...

அவை தானே அன்பை வார்க்கும் தோழிகள்.


கொஞ்சம் இன்பம்...

கொஞசம் துன்பம்...

இரண்டும் வேண்டும்.

இதை அன்றி...

வேரென்ன இங்கு வேண்டும்.


இந்த பூமி பந்து தான் கோலியா...

அதில் ஆடி பாடுவோம் ஜாலியா.