Friday, February 25, 2011

காதலை வெறுத்தவன் பேசுகிறேன்

காதலன்களின் காதுகளே...
காதலை வெறுத்தவன் பேசுகிறேன்,,,
கேளுங்கள்.
காதலே வேண்டாம்,,,
காது கொடுத்துக் கேளுங்கள்.
கனவிலிருந்து மீளுங்கள்.
கண் கட்டை கொஞ்சம் அவிளுங்கள்.

ஆண்கள் என்ன ஏமாற்றும் வர்கமா..?
இருக்கலாம்,,,
ஆனால் ஆண்கள் மட்டுமா..?
ஏமாற்றும் பெண்களை காட்டட்டுமா..?
நானும் எமார்ந்தவன் தான்...
ஆதலால் தான் கூறுகிறேன் திட்டவட்டமா.

இது சுயநலம் சூழ்ந்த உலகம்...

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போதிலும்,,,-உன் காதல்
அங்கே எச்சிலை கொண்டு சமாளிக்கும்.
பிச்சைக்காரன் ஆகும் நிலை வரைக்கும் கொண்டு செல்லும்,,,-அவள் காதல்
அப்போது அது புலிக்கும்.


இது உணர்ச்சி இல்லாத உலகம்...

உன்னவள் உன்னவில்லை என்றால்...
உன் நா ருசியை வெறுக்கும்.
அவளால் நீ பசியை இருப்பதை அறிந்தால்,,,-அவள்
மனம் ரசிக்கும்.

சுத்தலில் விடும் சித்திரப் பெண்கள்...
ஆயிரமையா.
காதலே பெண்களுக்கு பழிவாங்கும் ஆயுதமையா.
பத்திரமையா...
பத்திரமையா...-இது
எனது கறுப்புச் சரித்திரமையா.

மானசீகமாய் அவளை

அடங்காத காதல் தொடங்கியது...
மௌனம் மனசுக்குள் முடங்கியது.
இது வரை போட்ட ஆட்டமெல்லாம்...
அரை நொடியில்,,,
அடையாளமே இல்லாமல் அடங்கியது.

மனசென்னும் கிடங்கு...
மானசீகமாய் அவளை ஏற்றுக் கொண்டது.
இது தான் முதல் முறை...
மௌனம் எனும் விலாசத்தில்,,,-நான்
தொலைந்து போனது.

காதல் என்பது கடவுளின் பரிமாணம்...
கண்டதும் அவளை கண்டுக்கொண்டேன் நானும்.
காதலே எனது நா சபிக்கும் நாமம்...
எல்லாவற்றிற்கும் அவளே காரணம்.

யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்

அமைதி சூழ்ந்த ஒரு காடு....
அது ஆவிகளின் வீடு.
ஒரு சுதந்திர நாடு...
அது தானே சுடு காடு.

செவியை சேதம் செய்யும் இரைச்சல் இல்லை...
ஒற்றுமை குலைக்கும் ஜாதி பேதம் இல்லை...
அரசியல் இங்கே நுழைவது இல்லை.

வீதிச் சண்டை இல்லை...
பட்டானிச்சாவு இல்லை...
அதிகார ஆதிக்கம் இல்லை.

விவாகரத்து இல்லை...
வன்முறை இல்லை...
எதிரி இல்லை.

பெயருக்குத் தான் அது கல் அறை (கல்லறை)...-அது
சுதந்திரத்தின் கருவறை.
வாடகை இல்லாத சொந்தக் கூரை...
அங்கு வாழ்ந்து தான் பார்ப்போமே ஒரே ஒரு முறை.

நடு முதுகு வேர்க்கும் வரை நீடிக்கும் நடுக்கம்...
யாருக்கு தான் அங்குப் போக பிடிக்கும்..?
ஓர் உண்மை...
அங்கு மட்டுமே தனிமையின் சுகம் கிடைக்கும்.
யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்.