Sunday, February 20, 2011

தமிழ் மொழி நமது தவ மொழி

பெற்றத் தாய் போல் இல்லையா...-உன்
தாய் மொழி.
உனது உதடுகள் மீது உரிமை கொள்ள,,,
அதற்கு வாய்ப்பளி.
ஓர் உன்னத மொழி...
அது தமிழ் மொழி.
தமிழ் பேசும் தமிழன் தான்,,,
இந்த உலகில் அதிர்ஷ்டசாலி.


உனக்காய்...

ஒவ்வொரு நொடியும்...
உன் பெயர் சொல்லி இதயம் துடிக்குதடி.-அந்த
ஒவ்வொரு துடிப்பும்,,,
எனக்காய் அல்ல...உனக்காய் துடிக்குதடி.

பாடு போருளானவள்

எனது பேனா முனை முதல் முறை தலை குனிந்தது...
அவளது அழகான பெயரை எழுதத் தான்.

எனது கண்கள்முதல் முறை பார்வை இழந்தது...
அவளது நிழலில ஒதுங்கிய போது தான்.

எனது கால்கள் முதல் முறை வேர் கொண்டது...
அவளது இருப்பிடம் கடந்த போது தான்.

எனது இருதயம் முதல் முறை துடிக்க மறந்தது...
அவளது திருமுகம் கண்ட போது தான்.

எனது நாட்கள் முதல் முறை புன்னகையில் பூ பூத்தது...
அவளது அருகில் நிற்கும் போது தான்.

எனது கவிதைகள் முதல் முறை கால் முளைத்து நடந்தது...
அவளது பெயரே அதற்கு பாடு பொருள் ஆன போது தான்.