Friday, February 11, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

வாழ்க்கை வாழத் தெரியாதவன்...வாழ்நாள் கைதி.

வினோதமான வினா

எல்லோரும் உறங்கும் பொழுது...
நான் மட்டும் உறங்கவில்லை.
எல்லோரும் உண்ணும போது...
நான் பசியை உணரவில்லை.
எல்லோரும் மழையை நனைந்த பொழுது...
என்னை மட்டும் மழை நனைக்கவில்லை.
ஏன்..?
ஏன்..?
ஏன்..?
வினோதமான வினா இது,,,
விவரிக்க விடை இல்லை.

உள்ளம்

உள்ளங்கை ரேகை உள்ளத்தை சொல்லுமா...
உள்ளத்தில் உள்ளதை தான் சொல்லுமா.
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும் உள்ளம் தான் ஏதம்மா..?

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

அமைதி...
ஆண்டவனின் சன்னதி.