Tuesday, March 15, 2011

வாழ்த்திட வாரீர்


" என் தங்கையின் திருமண அழைப்பிதழுக்காக அட்சரமாக்கிய அழைப்புக் குவியல்கள்"

திருமண நாள் : 04 . 06 . 2011


ஒரு மகன்...
மணமகள் மனம் கவர்ந்த திருமகன்.
ஒரு மகள்...
மணமகன் மனம் கவர்ந்த திருமகள்.
ஒரு நாள்...
சுபமுகூர்த்தம் கூடி வரும் மங்கள நாள்.
ஒரு மேடை...
நவரத்தினங்களால் கூடிய மணமேடை.

ஆதவன் அங்கு...
ஆனந்தமாய் எரியும் அக்கினியாக...
தென்றல் அங்கு...
மந்திரம் ஓதும் புரோகிதராக...
விண்மீன்கள் அங்கு...
மேடை போர்த்திய அலங்கர விளக்குகளாக...
மேகத்தின் இரு கைகள் அங்கு...
மணமக்கள் அமரும் இருக்கைகளாக...
பஞ்சபூதங்கள் – மணமகன் வீட்டார் சார்பாக.
நவகிரகங்கள் – மணமகள் வீட்டார் சார்பாக.

அண்டங்கள் ஆளும் அந்த ஆண்டவனே...
இத்திருமணத்திற்கு சாட்சியாக.

உலகமே ஒன்று திரண்டும் இன்னும் காத்திருக்கிறோம் ஏதற்காக..?
உடனிருக்கும் உறவினர்களே,,,
நட்பு நல்கிய நண்பர்களே,,,
அறிவை அளித்த ஆசான்களே,,,
உங்கள் வருகைக்காக.
வந்து இந்த மணமக்களை மனதார வாழ்த்துவதற்காக.

வாழ்த்திட வாருங்கள்...
விண்ணை விட உயர்ந்தது உங்கள் ஆசிர்வாதங்கள்.