Wednesday, April 15, 2009

கடவுள் குழந்தைகள்



புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்...
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள்...
தாய் தந்தை பாசம் அறியாத பேதைகள் நாங்கள்...
சொல்லுங்கள்...
சொல்லுங்கள்...
எதிரியா நாங்கள்..?

பழிச் சொல் தாங்கும் பாறைகள் நாங்கள்...
உறவின்றி வாழும் உயிர்கள் நாங்கள்...
நீதிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குற்றவாளிகள் நாங்கள்...
தாருங்கள்...
தாருங்கள்...
முகவரி தாருங்கள்.

அப்பா யாரு தெரியவில்லை...
அம்மா பெயரும் அறியவில்லை...
எங்கள் வேதனை யாருக்குமே புரிவதில்லை.
என் தாய்க்கு ஏனோ என்னை பிடிக்கவில்லை..?
கண்ணீர் விட்டு அழுகுது இந்த பிஞ்சு முள்ளை.

பெற்றேடுத்தால் போதுமா..?
பெற்ற கடன் தீறுமா..?
என்னை பெற்ற தாயவள்...
எங்கே நீ சொல்லம்மா.
காத்திருந்தும் பயனில்லை,,,
நான் செஞ்ச பாவமா.

தாய் பால் ருசித்ததில்லை...
உணர்ச்சிகள் இல்லா கொடியவனா..?
தந்தை முகம் கண்டதில்லை...
கண்கள் இருந்தும் குருடனா..?

சுற்றம் சொன்ன அனாதை பட்டம்...
அதுவே எனக்கு பெயராச்சு.
அலையாடினேன்...
ஆதாரம் தெடினேன்...
எமாற்றமே எனக்கு வரமாச்சு.

என்னை பெத்த மகராசி...
எனக்கும் இல்லை முகராசி.
அன்பை அனுபவிக்காத ஆதிவாசி...
இந்த சமுதாயத்தை பொருத்தவரை நான் வெறும் தூசி.

இரு மனங்கள் சேறும் திருமணம்



(கல்லூரி தொழியின் திருமண விருந்துபசரிப்பின் போது வாசிக்கப் பட்ட கவிதை)

ஓரிரு வாரங்களுக்கு முன்பு...
அந்த பிரம்ம தேவனிடமிருந்து ஓர் அழைப்பிதழ் தூது விட பட்டது.
விரும்பிப் படித்தேன் அது திருமண அழைப்பிதழ் என்று தெரிந்தது.

தேவலோகத்தில் திருமணமாம்...
சூரிய மண்டலத்து இளவரசனையும்...
சந்திரத் தேசத்து ராஜ குமாரியையும்...
இணைக்கும் வன்னம் இப்படி ஒரு உடன் படிக்கையாம்.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,,,
இந்த திருமணம் வின்னிலாம்...
விருந்துபசரிப்பு மண்ணிலாம்...

வின்வெளி என்பது வெகு தூரம் என்பதால்,,,
அங்கே எனது வருகயை பதிவு செய்ய இயலவில்லை.
அதனால் தான் இங்கு பதிவாகிவிட்டேன்.

எங்கோ பிறந்த ஒரு பூமகள்...
எங்கோ பிறந்த ஒரு திருமகன்...
இந்த இரண்டு இதயங்களையும் இணை பிரியாது சேர்த்து வைத்தான் இறைவன்.
திருமணம் என்ற பெயரில் அழகிய இரு மனங்களை கோர்த்து வைத்தான் இறைவன்.

தலைவனுக்குத் தலைவி இவள் தான்...
தலைவிக்குத் தலைவன் இவன் தான்...
என்று இறைவன் எழுதி வைத்தான்.
அவன் ஒரு கைத்தேர்ந்த நிபுனன் என்பதற்க்கு சான்று இந்த அழகிய மணமக்கள் தான்.

இவள் பெயருக்கு பின்னே அவன் பெயரும் சேர...
இப்படி ஒரு ஜோடியா என்று ஊரே நயந்து கூர...
இன்பங்கள் வந்து வாழ்க்கையில் தூர...
அந்த பிரம்மனும் ஆசைப்படுவான் உங்கள் குடும்பத்தில் இணை சேர.

இவன் இரவுக்கு அவள் நிலவாக...
அந்த நிலவுக்கு அவன் ஒளியாக.

அவன் தோட்டத்தில் அவள் மலராக...
அந்த மலருக்கு அவன் மணமாக.

ஒருவருக்கு ஒருவர் துணையாக...
வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மகிழ்வாக.

ஜோடிப் புறாக்கள் நடந்து வருகயிலே,,,
நிமிர்ந்துப் பார்க்கும் நீல வானம்.
ஓவ்வொரு அடிக்கும்,,,
ஓராயிரம் மலர்களை தூவும்,,,
குறிஞ்சிப் பூசெடிகள்.

வானம் முழங்கிட...
மேகம் மேளம் கொட்ட...
தேரில் உலா வரும் மணமக்கள்...
வானவில் குனிந்து சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அமைதியை எங்கே தேடுவது..?



அமைதி
ஆண்டவனின் சன்னிதி.
ஆள் இல்லாத அண்டங்களின் ஆரம்ப கால அவதி.

அமைதி...
கல்லரையின் விதி.
அதுவே நம் வாழ்க்கையின் காலாவதி.

அமைதி,,,
சிலருக்கு அது இனிமை...
அறுசுவை படைக்கும் கவிஞனுக்கு அங்கு தான் எழும் கற்பனை.

அமைதி,,,
சிலருக்கு அது கட்டாய கடமை.
கணவனை இழந்த பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட தண்டனை.

அமைதி,,,
சிலருக்கு அது சோதனை...
சிறை கைதிகளுக்கு கிடைத்த போதனை.

ஆமைதி,,,
சிலருக்கு அது கொடுமை...
காது கேளாதவர்களுக்கு பெறும் வேதனை.

இரவுக்கு அமைதி...பனித்திரை.

மனசுக்கு அமைதி...மாசு இல்லாத யாத்திரை.

மனிதனுக்கு அமைதி...நல்ல நித்திரை.
சில சமயங்களில் மாத்திரை.

இன்றோ,,,
அமைதி கூட ஆரவாரமாகவே இருக்கிறது...
கடல் அலைகள் கூட கரையை வந்து சேறும் போது கூச்ச்ல் போட்டுக் கொண்டு தான் வருகிறது.
அந்த,,,
அமைதியை எங்கே தேடுவது..?
அதை இங்கே தேடுவதர்க்குள்ளேயே அமைதி எங்கோ ஓடி விடுகிறது.

தமிழா நீ வீரனடா...



வீறு கொண்டு எழுந்து வா,,,
என் வீர தமிழா.
பூகம்பத்தை கடந்திடலாம்...
பூ கம்பத்தில் ஏறி நின்று புது புரட்சி செய்யலாம்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் வெற்றி தமிழா.
ஆழ் கடலில் இன்னும் ஏன் தத்தளிப்பு..?
அலைகளை கடந்து வா,,,
கரையில் உனக்கு பரிசளிப்பு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் சாதனை தமிழா.
சிகரத்தை கண்டு பயம் எதற்கு..?
உச்சியில் நின்று பார் சிறகுகள் முளைக்கும் உனக்கு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் புரட்சி தமிழா.
குற்றம் சொல்லும் சுற்றம் ஓயாது...
சுற்றங்களை விட்டு விடு,,,
மாற்றங்கள் செய்து விடு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தங்கத் தமிழா.
வெறும் கையால் முழம் போட்டது போதும்...
கரங்களை தட்டு மலைகளும் நகரும்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தாய் தமிழை பருகிய தமிழா.
உன் பெயரை உரைக்காத இதழ்களா..?
உனக்காக நடத்தும் இந்த உலகம் ஒரு வெற்றி விழா.

சுனாமி



(சுனாமியின் சீற்றத்தால் என் கண்கள் அழுத போது விளைந்த கண்ணீர் ஊற்றுகள்)

ஹேய் நிலமே...
ஹேய் நிலமே...
உனக்கும் கூட எங்கள் மேல் இரக்கம் இல்லையா.
நாங்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.
எங்களுக்கெல்லாம் இந்த பூமியில் வாழ இடம் இல்லையா..?

எத்தனை கனவுகள்...
எத்தனை ஆவல்கள்...
எத்தனை ஆசைகள்...
எல்லாம் உன் மடியிலே கலைந்தது பார்த்தாயா...
அதுவும் உன் தயவாலே சிதைந்தது பார்த்தாயா...

பூமி தேவதையே...
உன்னை நம்பி எத்தனை உயிர்கள்.
கண்கள் களைப்பாரும் வேலையிளே,,,
கண்கள் விழிக்காதபடி செய்து விட்டாயே.

பத்து மாதங்கள் சுமந்த தாயை விட நீ உயர்ந்தவள் அல்லவோ...
உன் பிள்ளைகளை நீயே விழுங்கியது சரியாமோ.
பொறுமை காக்கும் புண்ணியவதியே,,,
இது தான் தாய்மையின் குணமோ.

பச்சை மழலைகள் பட்டினியிலே...
பால் கொடுத்த தாய் உன் வயிற்றுக்குள்ளே.
பிள்ளைகளை இழந்த தாய் கண்ணீரிலே...
மண்னை அரியாத மழலைகள் மண்ணுக்குள்ளே.
உலகே சவக்கிடங்காகி கிடக்குதே...
நீ விழுங்கி துப்பிய அரைகுறைஉடல்களில் இரத்தம் இன்னும் காயலே.
உடமை இழந்த நடைகளின் விதி வீதியிலே...

உயிரை வாங்குவதல்லவோ உன் பணி
உயிரை வார்பதுதனோ
கடமை தவரிய காட்டேரியே
சொக்கனின் பணி உனகெதற்கு

பாவி மகளே,
யாருக்கு நீ வைத்த குளியோ...
அம்பை ஏய்து விட்டாய்....
அண்டங்களை சிதைத்து விட்டாய்....
நிலங்களை பிளந்துவிட்டாய்....

ஒரு நொடி கோபத்துக்கு
ஓராயிரம் கோரங்கள்....
ஒரு நாள் கூத்துக்கு....
குவிந்திருக்கும் பிணங்கள்....


கட்டிட இடுபடுகளுக்கிடையே.....
உயிர் இருந்தும் பிணமாக...
அளுகுறல் கேட்கலையோ....
காப்பாற்ற யாராவது வருவார் என்று ஆவலுடன்.....

நாங்கள் செய்தால் கொலை- அதை 
நீ செய்தால் இயற்கை தவறா?

ஆதாரம் சொல்லலாம்.....
அது இயற்கையின் சீற்றம் என்று....
எந்த நீதி கூண்டிலும் நின்று சொல்வேன்-
இது நீ செய்த குற்றம் என்று.....

நட்பு



அதிசயமானே உலகம் இது...
ஆனந்தம் குவிகிறது.
ஆணும் பெண்ணும் ஆறோக்கியமாய் அன்பு கொல்லும் உறவு இது.

உலகம் என்பது அழிந்து போகலாம்...
உயிர்கள் யாவும் மடிந்து போகலாம்...
நட்பு கொண்ட உள்ளங்கள் மட்டும் மறுமையிலும் புனித உறவு கொள்ளலாம்.

பயணம் என்பது முடிவை காணுமே...
வாழ்க்கை என்பது நிறைவை காணுமே...
நாளைய உலகம் முற்று பெறுமே...
நட்பு கொண்ட உயிர்கள் மட்டும் கொஞ்சம் மனது வைத்தால்,,,
உயிர்கள் இன்னும் கொஞ்ச நாள் மண்ணில் வாழுமே.

உண்மை அறிந்தேன்

மின்னலில் ஏரி வந்தவன்...
உன் பின்னலில் மாட்டி கொண்டேன்.
முன்னாளில் நான் கண்ட கணவு எல்லாம்...
பின்னாளில் நனவாக கண்டேன்.

சொந்த பாதையில் நடந்து வந்தவன்
பாதை மறந்து விட்டேன்.தொலைத்த பாதை தேடி தேடி...
நீ கடந்த பாதையில் பயணம் தொடர்ந்தேன்.
வானமே போதும் என்று வாழ்ந்தவன்...
நிலவை துணைக்கு கேட்கிறேன்.

பகலில் கூட அவள் உதயமாக வேண்டும் என்று வரம் கேற்கின்றேன்.
கவிதை பேசி வந்தவன்...
உன் முன்னாலே பேச திணறுகிறேன்.
அவஸ்தை என்பதை என் ஆயுள் வரமாய் ஏற்று கொண்டேன்.

சொந்த பந்தம் கூடி வந்தவன்...
அகதியாக நிற்கின்றேன்.
உறவு என்று உன் பெயரை ஊருக்கே சொல்கின்றேன்.

கண்களை மூடி கொண்டவன்...
காதலே வேண்டாம் என்று இருந்தேன்.
கண்கள் திறந்து பார்த்தேன்...
கண்கள் மூட மறுக்கின்றேன்.
வயதை பூட்டி வைத்தவன்...
மனதை பூட்டி வைக்க மறந்தேன்.
மனது உன்னை காட்டி கொடுக்க,,,
உன்னில் நான் பூட்டி கொண்டேன்.
நிலவின் வருகை அறிந்து கொண்டவன்...
உன் வருகை உணராதிருந்தேன்.
உயிரில் புகுந்து நீ உறவாடிய போது தான் அதன் உண்மை அறிந்தேன்.

அறுசுவை அகராதி

அட்சரங்க்களை தொடுக்க பேனா தேவையில்லை எனக்கு...
உன் விரல்கள் போதும் எனக்கு.
உன்னை எண்ணி பார்த்தாளே,,,
எல்லை இல்லை என் எண்ணங்களுக்கு.


எதுகை மோனை எதற்க்கு எனக்கு..?எதுகைக்கு ஏதுவாய் உன் எழில் இருக்கு.மோனைக்கு துணையாய் உன் இதழ் இருக்கு.

என் அகரத்தை ஆக்ரமித்த ஆகாரமே...
ஒரு அறுசுவை அகராதி தான் நீ எனக்கு.

பிரிவோம் சந்திப்போம்




மண்ணில் ஒரு சொர்க்கம் கண்டோம்...
அந்த கல்லூரி எனும் மலர் சோலையில் தஞ்சம் கொண்டோம்.
பாடம் மட்டும் நாங்கள் அங்கே கற்றுக் கொள்ள வில்லை...
நல்ல பாடமும் சேர்த்து கற்று கொண்டோம்.
ஏட்டுக் கல்வியை மட்டும் பெற்றுக் கொள்ள வில்லை...
வாழ்க்கை கல்வியையும் பெற்று கொண்டோம்.

கல்லூரி களமே...
அன்றும் இன்றும் என்றும்,,,
நீ தான் எங்களுக்கு எல்லாமே.
உன் மடியில் தவழ்ந்த ஒவ்வொரு நாழிகையும் நெஞ்சில் இனிக்குமே.க
ல்லூரி தளமே...
உன்னை நினைக்குக் போதெல்லாம் உள்ளத்தில் கண்ணீர் ஊறுமே.
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியும் உன்னையே சாருமே.

கனமான நட்பின் பரிமாற்றம்...
உயிரான காதலின் உருவாக்கம்...
நினைத்து பார்த்தால் கண்ணீர் சுரக்கும்.

சின்ன வண்ண குறும்புகள்...
செல்லம் கொஞ்சும் சண்டைகள்...
வேறு எங்கு விளையும் இந்த விந்தைகள்..?
இவை அனைத்தயும் வரமாய் தந்தது இந்த கல்லூரி நாட்கள்.

நாம் நடந்த இந்த கல்லூரி தரைகளிள் படிந்திருப்பது...
நம் கனவுகளை சுமந்த காலடி சுவடுகள்.
உயர்ந்திருக்கும் காம்பௌண்ட் சுவர்கள் பதிவு செய்து உரைக்கும்,,,
நாம் பேசிய வார்த்தைகள்.
நூல்களை தவிர நாம் நேர்மையாய் வாசித்தது நன்பர்களின் இதயங்கள்.

எங்கிருந்தோ வந்தோம்...
அறிமுகம் இல்லா முகவரிகளோடு.
ஒன்றாய் இனைந்தொம் இதயத்தின் சுகவரிகளோடு.
இன்று பிரிந்தும் பிரியாதிருக்கிறோம் மறக்க மறுக்கும் நினைவுகளோடு.

கண்கள் நனைகின்றது...
மீண்டும் அந்த வாழ்க்கை வெண்டும் என்று நெஞ்சம் கேட்கின்றது.
ஒரு வேளை நாம் மறந்தால் கூட,,,
நினைக்கச் சொல்லி நினைவுகள் நம்மை அடிக்கின்றது.
அந்த அற்புத நாட்களை எண்ணி எண்ணியே நம் இதயமும் இயல்பாய் துடிக்கின்றது.

பிரிவோம் சந்திப்போம்...
நம் பிரிவை நாம் சந்திப்பதற்க்காக அல்ல.
நாம் பிரிவதே மீண்டும் சந்திப்பதற்க்காக.
பிரிவே இல்லாத வாழ்க்கையை நம் கல்லூரி நினைவுகள் தரும் நிச்சயமாக.

அழகை அறுவடை செய்தவன்



அழகான சிற்பத்தை செதுக்கியவன் சிற்பி என்றால்...
அழகான உன்னை செதுக்கிய ஆண்டவனும் ஒரு சிற்பி தான்.

கற்பனைகளை குடைந்தெடுத்து அட்சரமாய் தொகுப்பவன் கவிஞன் என்றால்...
தன் கற்பனைகள் முழுதயும் உனக்கென முற்றாக செலவழித்த கர்த்தன் ஒரு மஹா கவிஞன் தான்.

வியக்க வைக்கும் ஒரு காட்சியை வெறும் தூரிகை கொண்டு துவட்டி எடுப்பவன் சிரந்த ஓவியன் என்றால்...
வெறும் வானவில் வன்னமே கொண்டு இந்த உலகமே வியக்கும் வகையில் உன்னை வரைந்த அந்த இறைவனும் ஒரு கை தேர்ந்த ஓவியன் தான்.

எதையும் எதிர்க்க துனிந்தவன் வல்லவன் என்றால்...
பிரம்மோவியமே உன்னை இவ்வளவு பிரம்மாண்டமாய் படைக்க துனிந்து வெற்றி பெற்ற அந்த பிரம்மன் உண்மையில் சகலகலா வல்லவன் தான்.

அழகெனவே பிறந்தாளே...



அழகெனவெ பிறந்தாளே...
அழகை தன்னுல்லே தத்தெடுத்தாளே...
அக்கினி சூரியனை அலங்கரித்தவளே...
ஆக்கரையில் இருந்து இக்கரையை இயக்குகிராய்,,,என் இனியவளே.

சுந்தர பெண்னவளே...
செந்தூர கலைமகளே...
சந்திரனை சுருட்டி போடும் வித்தைகள் கற்றவளே...
சொந்தமாக ஒரு வானம் செய்து அங்கே வாழ்கிறாய்,,,
என் இயற்கையின் மகளே.

என் சிந்தை தரித்தவளே...
என் சிந்தனை கருவை கலைத்தவளே...
சிந்து நதி கரையில் தவழ்ந்தவளே...
சிந்திக்கும் போதெல்லாம் நீ மட்தும் தான் முந்தி கொள்கிறாய்,,,
என் சிங்கார மான் விழியே.

உறுகுதே வானவில்...
உன் தலை மேலே.
பெருகுதே வண்ணங்கள்...உன் உடல் மேலே.
பூமியும் அழகானது உன்னாலே.
அண்டங்கள் ஆளும் அழகியே...
எப்போது என்னை ஆள போகிறாய்,,,சொல்லடி என்னவளே.

சொர்கம் எப்படி இருக்கும்..?

பூக்களால் நெய்த புல் தரைகளாய் படிந்திருக்குமா..?

தேவர்களும் தேவதைகளும் உலா வரும் உல்லாச தலங்கலாக இருக்குமா..?

குலிர் சாதன வசதிகள் கொண்ட விடுதிகள் நிறைந்திருக்குமா..?

வித விதமானே வினோத உணவுகள் அங்கே செய்து தர படுமா..?

போக்குவரத்து நெரிசலே இல்லாத சாலைகள் தென் படுமா..?

போர் தயக்கமே இல்லாதே வழக்கங்கள் அங்கே அனுசரிக்க படுமா..?

தமிழ் மொழி அங்கே உலக மொழியாய் போற்ற படுமா..?


பணம் என்ற பேய்கள் இல்லாத புது பொருளாதாரம் அங்கே கடை பிடிக்கப்படுமா..?


அடிமை என்ற சொல்லே அங்கே வலக்கிலிருந்து அகற்ற படுமா..?

ஜாதி மதம் என்ற கொடிய பேதங்க்கலே இல்லாத வேதங்களின் ஆதிக்கம் கொண்டாட படுமா..?

அரசியல் சாக்கடைகள் தூர்வாரப் பட்ட தொகுதிகலாக தகுதி பெறுமா..?

சொர்கம்.
இப்படி இருக்குமா..?
இல்லை,,,
அப்படி இருக்குமா..?
நேரில் பார்த்தவர்களை நாம் தான் நேரில் பார்க்க முடியுமா..?
சொர்கம் எங்கே என்று தேடுவதை விடு,,,
நீ எதிர் பார்க்கும் சொர்கத்தை உருவாக்க உடன் படு.
உலகத்தை விட ஒரு சொர்கம் வருமா..?

கவிதைகள் வரைகிறேன் நூறு...

கவிதைகள் வரைகிறேன் நூறு...
பொய்களை அதிலே பாரு.
தமிழோடு போராடுவதால்,,,
எனக்கு கவிஞன் என்று பேரு.

சிந்தனைக் கடலை அலசி ஆராய்ந்து...
தமிழ் முத்துக்களை சேர்த்து குவித்து...
சரம் சரமாய் கோர்த்ததில்,,,
சேர்ந்தது சந்தங்க்கள் சிந்தும் பூங்கொத்து.
என் வேலை பாடுகள் ஒவ்வொன்றும் எனக்கு கிடைத்த பெரிய சொத்து.

பொழுதுகள் விடியுமொ இல்லயோ...
என் கற்பனை மேடையில்...
கவிதைகள் அரங்கேர தவராது.
ஊலக கஜானா வற்றி போனாலும்,,,என் கற்பனை கஜானா வற்றி போகும் சூல்நிலை வாராது.
கவிதை பசி என்றுமெ எனக்கு தீராது.

இன்று நானும் கவிஞன்



தொடக்கம்...
தொடக்கம்...
தொடக்கம்...
என் உயிரில் கவி தொடக்கம்...

தொடரும்
அது தொடரும்...
வாழ்வின் எல்லை வரை தொடரும்.

எனக்கென நான் எழுதும் முதலாம் சுயசரிதை...
இனி சுயமாய் எழுத போகிறென் கவிதை.
யாராலும் இனி தடுக்க முடியாது நான் ஒரு கவிஞனாவதை.

யார் தந்ததிந்த கவி ஞானமொ..?
இன்று நானும் கவிஞன்.
தமிழ் தாயின் ஆசிர்வதத்தால்,,,
இன்று நானும் தமிழ் தாய்க்கு மகன்.

தமிழுக்கும்...
தமிழ் கவிதைகளுக்கு அடிமையான ரசிகன்.

கவிதை என்னானது..?

இரவு எழுதிய கவிதை நிலவானது...
ராவோடு ராவாக அது களவானது.

கனவு எழுதிய கவிதை கானலானது...
உறக்கம் தெளிந்து எழுந்தால் அது தூள் தூளானது.

விரல்கள் எழுதிய கவிதை அட்சரமானது...
சந்தம் என்னும் நூலில் கட்டிய பூச்சரமானது.

கண்கள் எழுதிய கவிதை காட்சிகளானது...
உண்மை என்று நிருபிக்க அதுவே சாட்சியானது.

தென்றல் எழுதிய கவிதை தீண்டி போனது...
பெயர் கேட்பதர்க்கு முன்னறே ஓடி மறைந்து போனது.

இயற்கை எழுதிய கவிதை அழகின் சொப்பனமானது...
செயற்கையின் கையில் அக பட்டு அழுக்கான சிற்பமானது.

காதல் எழுதிய கவிதை இரு இதயங்க்களுக்கு தூதானது...
தன்னையே மறக்க செய்யும் மதுவானது.