Tuesday, February 22, 2011

காரணம் அவள் ஞாபகம்

தழும்பு இல்லாத காயம்...
தாழம் பூவாய் நெஞ்சில்,,,
காதல் எனும் ஒரு மாயம்.
இரும்பு போல் இறுகிக் கிடந்த இதயம்...
திரும்ப திரும்ப உருகி வழிகிறது,,,
காரணம் அவள் ஞாபகம்.

இதயம் நடிக்கிறது...

கொஞ்ச நாளாய் என் விழிகளிக்கு...
வனப்பு கூடுவதை உணர்கிறேன்.
அவளைப் பார்த்த நாளிலிருந்து ...
விட்டு விட்டு துடித்த இதயம்,,,
விடாமல் துடிப்பதை உணர்கிறேன்.

போதை இதழ்

போதை இதழ் குவிக்க...
பேதை தன் இமை விரிக்க ...
பூ வாங்கி வந்த அவள் பூ முகமோ,,,
என் மீது தேன் தெளிக்க.