மரணம் என்பதே உலகில் இருந்திருக்காது.
வறுமையின் வரைப்படமே இருந்துருக்காது.
கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
கண்ணகியின் கண்ணீருக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும்.
புன்னகையே உயிர்களின் தாய்மொழி என்றாகியிருக்கும்,
கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
ஓர் இரவுக்கு ஓராயிரம் நிலவுகள் தந்திருப்பான்.
அடிக்கடி புது புது கனவுகளில் வந்திருப்பான்.
கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
கவிதைகளுக்கு மண்ணில் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை.
வைரமுத்துவுக்கும் வாலிக்கும் இனி வேலையே இல்லை.
கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
காதல் தோல்வியில் அவன் கலங்க்கலாம்.
கடைசியில் தேவதாசைப் போல தாடி வளர்க்கும் நிலை வரலாம்.
கடவுளுக்கும் ஒரு நாள் காதல் வரும்...
அன்று இந்த காதல் கொண்ட மனிதர்களின் நிலைமை தெரியவரும்.