Saturday, February 12, 2011

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
மரணம் என்பதே உலகில் இருந்திருக்காது.
வறுமையின் வரைப்படமே இருந்துருக்காது.

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
கண்ணகியின் கண்ணீருக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும்.
புன்னகையே உயிர்களின் தாய்மொழி என்றாகியிருக்கும்,

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
ஓர் இரவுக்கு ஓராயிரம் நிலவுகள் தந்திருப்பான்.
அடிக்கடி புது புது கனவுகளில் வந்திருப்பான்.

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
கவிதைகளுக்கு மண்ணில் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை.
வைரமுத்துவுக்கும் வாலிக்கும் இனி வேலையே இல்லை.

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
காதல் தோல்வியில் அவன் கலங்க்கலாம்.
கடைசியில் தேவதாசைப் போல தாடி வளர்க்கும் நிலை வரலாம்.

கடவுளுக்கும் ஒரு நாள் காதல் வரும்...
அன்று இந்த காதல் கொண்ட மனிதர்களின் நிலைமை தெரியவரும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

இந்தப் பிறவி நமக்கு நிரந்தரமில்லை...அடுத்தப் பிறவி நமக்கு நிச்சயமில்லை.

அறிமுகம்

திரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
திரும்ப திரும்ப பார்க்கச் சொல்லும் அந்த முகம்.

விரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
விரும்ப விரும்ப நிரம்பும் அந்த முகம்...

அழகு அரும்பும் அந்த முகம்...
எனக்குள்ளே முதன் முதலாய் அறிமுகம்.

அறிமுகம்

திரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
திரும்ப திரும்ப பார்க்கச் சொல்லு அந்த முகம்.
விரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
எனது விருப்பத்தின் பெயரிலே எனக்கு அறிமுகம்.
எனது மொத்த விருப்பமும் இனி அதே திருமுகம்.

நடக்கும் நந்தவனம்

நடக்கும் நந்தவனமே...
உன் கால்கள் நடக்க சாலை மரமெல்லாம் மனம் நொந்து போகும்.
கொஞ்சம் பொறு,,,
மேகம் வந்து உன்னை சுமந்து போகும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

மனிதனின் வாழ்க்கை ஒரு முறை தான்...
வாழ்க்கை இழந்தவன் மண்ணுக்கு இரை தான்.