Friday, March 4, 2011

நாவுக்கு நாதியில்லை

தூரம் நின்று கொண்டால்...
அகராதியும்,,,
அகலகவியும்,,,
நாவில் தவழுதே.
அருகில் நின்று கொண்டால்...
"அ" கூட அஞ்சுதே.

உதடுகளைத் தவிர

உன்னில் அத்தனையும் எனக்கு பிடிக்கும்...
உனது உதடுகளைத் தவிர...
அவை என்னைப் பார்க்கும் போதெல்லாம் ,,,
விரதம் ஏற்கிறதே.

நானும்...நீயும்...காதலும்...

உனக்குத் தெரியாமல் நானும்...
எனக்குத் தெரியாமல் நீயும்...
நமக்கே தெரியாமல் நம் காதலும்...
எப்போ முடியும் இந்த கோரம்..?

ஆவலோடு அவள்

ஒற்றை இரவிலே...
ஓராயிரம் கணவுகள்.
அத்தனை கணவுகளும்,,,
ஆவலோடு முடிந்ததே.
அறிகுறி கூட இல்லையே...
நீ வந்து என்னிடம் பேசுவாய் என்று.