Thursday, March 3, 2011

காதலின் நிர்பந்தம்

ஒவ்வொரு இரவும்...-அவளது
ஜீவ கைகள் என் இருதயத்தின் எல்லா அறைகளிலும்,,,
விளக்கேற்றி வைத்தது.

ஒவ்வொரு கோடையிலும்...-அவளது
ஆன்மீக அணைப்புகள் எனது பாலைவனம் எங்கும்,,,
நைல் நதியை நகர்த்தி வந்தது.

இலையுதிர் கால இம்சைகள்...-அவளது
நினைவுகளால்,,,
ஓராயிரம் காலத்து வசந்தத்தை ஆசிர்வதித்தது.

சற்று நேரம் அவளை நினைக்காமல் போனால் கூட...-என்
நிமிட நேரங்கள்,,,
நிஜங்களை நிராகரிக்கிறது.

No comments: