Wednesday, March 2, 2011

சுயமிழந்த சுயம்பு....

அழுத்துப் போனது வாழ்க்கை...
களைத்துப் போனது எனது கால் கை...
கிடைத்ததென்னவோ,,,
அவநம்பிக்கை.

என் கால்களுக்கு நானே ஓடக் கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...
என் நாவுக்கு நானே பேசக் கற்றுக் கொண்டிருக்கிறேன்...
தானாய் எதுவும் செயல்படவில்லை,,,
சுயமாய் யோசிக்கவே...இன்று யோசிக்கிறேன்.

சீர்திருத்தம் செய்ய எண்ணினேன்...
வருத்தம் தான் மிஞ்சியது.
பொருத்தம் இல்லாத இந்தப் பொறுப்போடு,,,
யுத்தம் செய்ய இனி மனம் அஞ்சியது.

போனால் போகட்டும்...
குற்றம் குறைகள் எனக்கே சேரட்டும்...
சுற்றம் எனது கண்ணீரின் உஷ்ணத்தில் குளிர் காயட்டும்.
பரவாயில்லை,,,
நான் படும் வேதனைகள் வேந்தனுக்காவது தெரியட்டும்.

No comments: