
அன்பே நீ எனக்கு,,,
மூங்கிலில் நுழைந்த சுக ராகங்கள் போல...
கோடையில் விழுந்த மழை துளி போல...
இருட்டுக்கு ஒலி வீசும் நிலவு போலே...
வெய்யிலுக்கு விரிந்த விருட்சம் போல...
தாகத்துக்கு தட்டுப் பட்ட தெப்பக் குளம் போல...
கண்ணீருக்கு வாக்கப் பட்ட கைக்குட்டை போல...
உழைப்பாளிக்கு ஒதுக்கப் பட்ட ஒரு நொடி உறக்கம் போல...
தத்தளிப்பவனுக்கு தென் பட்ட மிதவை போல...
பிச்சைக்காரன் தட்டில் விழுந்த சிவப்பு நோட்டு போல...
என் உடலுக்குள் ஊடுருவும் உயிர் போல...
இல்லை ஒரு ஜீவன்,,,
அன்பே...
உன்னைப் போல.
No comments:
Post a Comment