Wednesday, April 15, 2009

இரு மனங்கள் சேறும் திருமணம்



(கல்லூரி தொழியின் திருமண விருந்துபசரிப்பின் போது வாசிக்கப் பட்ட கவிதை)

ஓரிரு வாரங்களுக்கு முன்பு...
அந்த பிரம்ம தேவனிடமிருந்து ஓர் அழைப்பிதழ் தூது விட பட்டது.
விரும்பிப் படித்தேன் அது திருமண அழைப்பிதழ் என்று தெரிந்தது.

தேவலோகத்தில் திருமணமாம்...
சூரிய மண்டலத்து இளவரசனையும்...
சந்திரத் தேசத்து ராஜ குமாரியையும்...
இணைக்கும் வன்னம் இப்படி ஒரு உடன் படிக்கையாம்.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,,,
இந்த திருமணம் வின்னிலாம்...
விருந்துபசரிப்பு மண்ணிலாம்...

வின்வெளி என்பது வெகு தூரம் என்பதால்,,,
அங்கே எனது வருகயை பதிவு செய்ய இயலவில்லை.
அதனால் தான் இங்கு பதிவாகிவிட்டேன்.

எங்கோ பிறந்த ஒரு பூமகள்...
எங்கோ பிறந்த ஒரு திருமகன்...
இந்த இரண்டு இதயங்களையும் இணை பிரியாது சேர்த்து வைத்தான் இறைவன்.
திருமணம் என்ற பெயரில் அழகிய இரு மனங்களை கோர்த்து வைத்தான் இறைவன்.

தலைவனுக்குத் தலைவி இவள் தான்...
தலைவிக்குத் தலைவன் இவன் தான்...
என்று இறைவன் எழுதி வைத்தான்.
அவன் ஒரு கைத்தேர்ந்த நிபுனன் என்பதற்க்கு சான்று இந்த அழகிய மணமக்கள் தான்.

இவள் பெயருக்கு பின்னே அவன் பெயரும் சேர...
இப்படி ஒரு ஜோடியா என்று ஊரே நயந்து கூர...
இன்பங்கள் வந்து வாழ்க்கையில் தூர...
அந்த பிரம்மனும் ஆசைப்படுவான் உங்கள் குடும்பத்தில் இணை சேர.

இவன் இரவுக்கு அவள் நிலவாக...
அந்த நிலவுக்கு அவன் ஒளியாக.

அவன் தோட்டத்தில் அவள் மலராக...
அந்த மலருக்கு அவன் மணமாக.

ஒருவருக்கு ஒருவர் துணையாக...
வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மகிழ்வாக.

ஜோடிப் புறாக்கள் நடந்து வருகயிலே,,,
நிமிர்ந்துப் பார்க்கும் நீல வானம்.
ஓவ்வொரு அடிக்கும்,,,
ஓராயிரம் மலர்களை தூவும்,,,
குறிஞ்சிப் பூசெடிகள்.

வானம் முழங்கிட...
மேகம் மேளம் கொட்ட...
தேரில் உலா வரும் மணமக்கள்...
வானவில் குனிந்து சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments: