Wednesday, March 2, 2011

வணக்கம்

வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
வணக்கம் என்ற வார்த்தையை சொன்னாலே,,,
வாய் மணக்கும்.

பருவங்கள் மாறும் போது...
வழக்கமாய் நாம் மாற்றி உச்சரிப்பது,,,
காலை வணக்கம்...
மாலை வணக்கம்...
இரவு வணக்கம்...
என்ற வேளை வணக்கம்.

சபை முன்னிலையில் ஆர்வமாய் அமர்ந்திருக்கும் அவையினருக்கு...
அள்ளி இறைப்பது அவை வணக்கம்.

ஆசானாக நாம் ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு செலுத்துவது...
குரு வணக்கம்.

முதல் சந்திப்பில் அறிமுகம் ஆகும் போது...
கொஞ்சம் நம்பிக்கையோடும்,,,
கொஞ்சம் தயக்கத்தொடும்,,,
பரிமாறிக் கொள்வது...
அறிமுக வணக்கம்.

இம்மையில் நம்மை சுமந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு...
இறை வணக்கம்.

இப்படி வித விதமாய் வணக்கம்....
வணக்கம் வைத்துக் கொள்ள ஏனோ நமக்கு தயக்கம்..?
வணக்கம் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்,,,
அது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த அற்புத பழக்கம்.

No comments: