Saturday, February 19, 2011

எப்போது ஒருவன்,,,

எப்போது ஒருவன்,,,
தான் அடிமை என்பதை உணர்கிறானோ...
அப்போது அவன் முதலாளி ஆகிறான்.

எப்போது ஒருவன்,,,
விடியலை சந்திக்கிரானோ...
அப்போது அவன் உறக்கம் தெளிகிறான்.

எப்போது ஒருவன்,,,
கண்ணீர் விடுகிறானோ...
அப்போது அவன் தன் தப்பை உணர்கிறான்.

எப்போது ஒருவன்,,,
எப்போது ஒருவன் வாய் விட்டு சிரிக்கிறானோ...
அப்போது அவன் வாழ்க்கையில் அர்த்தம் அறிகிறான்.

எப்போது ஒருவன்,,,
நிமிர்ந்து பார்க்கிறானோ...
அப்போது அவன் உயர்வதர்க்கு தயாராகிறான்.

எப்போது ஒருவன்,,,
பொதுநலம் கருதுகிறானோ...
அப்போது அவன் தலைவன் ஆகிறான்.

எப்போது ஒருவன்,,,
தான் வாழ்வது மிருக வாழ்க்கை என்று நினைக்கிறானோ...
அப்போது அவன் மனிதன் ஆகிறான்.

No comments: