Sunday, February 20, 2011

பாடு போருளானவள்

எனது பேனா முனை முதல் முறை தலை குனிந்தது...
அவளது அழகான பெயரை எழுதத் தான்.

எனது கண்கள்முதல் முறை பார்வை இழந்தது...
அவளது நிழலில ஒதுங்கிய போது தான்.

எனது கால்கள் முதல் முறை வேர் கொண்டது...
அவளது இருப்பிடம் கடந்த போது தான்.

எனது இருதயம் முதல் முறை துடிக்க மறந்தது...
அவளது திருமுகம் கண்ட போது தான்.

எனது நாட்கள் முதல் முறை புன்னகையில் பூ பூத்தது...
அவளது அருகில் நிற்கும் போது தான்.

எனது கவிதைகள் முதல் முறை கால் முளைத்து நடந்தது...
அவளது பெயரே அதற்கு பாடு பொருள் ஆன போது தான்.

No comments: