Thursday, December 16, 2010

கழுதையை போனக் கதை


கதை தெரியுமா..?
தமிழன் எல்லாம் கழுதைகளாய் போனக் கதை தெரியுமா..?
அடிக்கப்பட்டு,,,-பின்பு
அடக்கப்பட்டு.
ஒடுக்கப்பட்டு,,,-பின்பு
ஒதுக்கப்பட்டு.
இன்றும் அடிமைகளாய் வாழும் கதை தெரியுமா..?
இதை தெரிந்து மட்டும் என்னவாகப் போகிறது..?
உணர்ச்சிகலெல்லாம் உலர்ந்து விட்ட உடலுக்கு தன்மானம் அவசியமாகுமா..?
அடிமையாய் வாழ்ந்தே பழகி விட்டது நமக்கு...
அடிப் பணியாமல் இருக்க முடியுமா..?
தலை குனியாவிட்டால் தூக்கம் வருமா..?

No comments: