Friday, April 17, 2009

மேக பூக்கள்


வானம் விட்டெரிந்த மேக பூக்கள்...
ஒன்றல்ல இரண்டல்ல,,,
எண்ணிலடங்கா பூக்கள்.
அவை விழுந்ததும் தெரிக்கும்...
ஆகாய கற்கள்.

கண்ணாடி மழை சாரல்...
வள நிலங்களை நனைக்குது தூரல்.
இந்த வினோத வரங்கள்,,,
இறைவன் அனுப்பிய ஏவல்.

கார்மேகம் கனம் தாங்காமல் விழுவதனால்,,,
மண் பாகம் காயாமல் குளிர்கிறது.
தூவானம் துள்ளி வந்து தவழ்வதனால்...
பூங்காவனம் குளித்து மகிழ்கிறது.

மண்ணை நனைக்கும் வெள்ளி மணி துளிகளே...
வின்னை துளைத்து வந்து தீர்த்தம் போடுங்களே.
யாரும் இதுவரை சொல்லாத உங்கள் பெறுமையை சொல்கிறேன் கேளுங்களே.
கேட்காமலேயே எங்களுக்கு வரம் தருவதால்,,,
நீங்களும் எங்களுக்கு கடவுளே.

No comments: