Friday, February 25, 2011

யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்

அமைதி சூழ்ந்த ஒரு காடு....
அது ஆவிகளின் வீடு.
ஒரு சுதந்திர நாடு...
அது தானே சுடு காடு.

செவியை சேதம் செய்யும் இரைச்சல் இல்லை...
ஒற்றுமை குலைக்கும் ஜாதி பேதம் இல்லை...
அரசியல் இங்கே நுழைவது இல்லை.

வீதிச் சண்டை இல்லை...
பட்டானிச்சாவு இல்லை...
அதிகார ஆதிக்கம் இல்லை.

விவாகரத்து இல்லை...
வன்முறை இல்லை...
எதிரி இல்லை.

பெயருக்குத் தான் அது கல் அறை (கல்லறை)...-அது
சுதந்திரத்தின் கருவறை.
வாடகை இல்லாத சொந்தக் கூரை...
அங்கு வாழ்ந்து தான் பார்ப்போமே ஒரே ஒரு முறை.

நடு முதுகு வேர்க்கும் வரை நீடிக்கும் நடுக்கம்...
யாருக்கு தான் அங்குப் போக பிடிக்கும்..?
ஓர் உண்மை...
அங்கு மட்டுமே தனிமையின் சுகம் கிடைக்கும்.
யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்.

No comments: