Friday, February 25, 2011

மானசீகமாய் அவளை

அடங்காத காதல் தொடங்கியது...
மௌனம் மனசுக்குள் முடங்கியது.
இது வரை போட்ட ஆட்டமெல்லாம்...
அரை நொடியில்,,,
அடையாளமே இல்லாமல் அடங்கியது.

மனசென்னும் கிடங்கு...
மானசீகமாய் அவளை ஏற்றுக் கொண்டது.
இது தான் முதல் முறை...
மௌனம் எனும் விலாசத்தில்,,,-நான்
தொலைந்து போனது.

காதல் என்பது கடவுளின் பரிமாணம்...
கண்டதும் அவளை கண்டுக்கொண்டேன் நானும்.
காதலே எனது நா சபிக்கும் நாமம்...
எல்லாவற்றிற்கும் அவளே காரணம்.

1 comment:

Anonymous said...

khathalai thedi kadavul bumikku vanthalum......
avanum nirpaan un varisaiyai thedi...
avalai eerka maanasigamai nee.....
nammai eerka manasigamai kadavul....