Friday, February 25, 2011

காதலை வெறுத்தவன் பேசுகிறேன்

காதலன்களின் காதுகளே...
காதலை வெறுத்தவன் பேசுகிறேன்,,,
கேளுங்கள்.
காதலே வேண்டாம்,,,
காது கொடுத்துக் கேளுங்கள்.
கனவிலிருந்து மீளுங்கள்.
கண் கட்டை கொஞ்சம் அவிளுங்கள்.

ஆண்கள் என்ன ஏமாற்றும் வர்கமா..?
இருக்கலாம்,,,
ஆனால் ஆண்கள் மட்டுமா..?
ஏமாற்றும் பெண்களை காட்டட்டுமா..?
நானும் எமார்ந்தவன் தான்...
ஆதலால் தான் கூறுகிறேன் திட்டவட்டமா.

இது சுயநலம் சூழ்ந்த உலகம்...

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போதிலும்,,,-உன் காதல்
அங்கே எச்சிலை கொண்டு சமாளிக்கும்.
பிச்சைக்காரன் ஆகும் நிலை வரைக்கும் கொண்டு செல்லும்,,,-அவள் காதல்
அப்போது அது புலிக்கும்.


இது உணர்ச்சி இல்லாத உலகம்...

உன்னவள் உன்னவில்லை என்றால்...
உன் நா ருசியை வெறுக்கும்.
அவளால் நீ பசியை இருப்பதை அறிந்தால்,,,-அவள்
மனம் ரசிக்கும்.

சுத்தலில் விடும் சித்திரப் பெண்கள்...
ஆயிரமையா.
காதலே பெண்களுக்கு பழிவாங்கும் ஆயுதமையா.
பத்திரமையா...
பத்திரமையா...-இது
எனது கறுப்புச் சரித்திரமையா.

No comments: