Sunday, March 6, 2011

ஒத்தையில ஓர் ஓலை


ரோசாவே...
என் ராசாவ பார்த்தாயா..?
தோ வரேன்னு போனவக...
தகவல் ஒன்னும் இல்லையே,,,
கண்டுப் பிடித்துச் சொல்வாய..?

செத்த மரத்த போல...
ஒத்தையில இந்த ஓலை.-மாமா நீ
ஏன் போகும் இடம் சொல்லல...?
நீ வருவேன்னு ஒரு நம்பிக்கை,,,
அதுனாலதான் இன்னும் சாகல.

ஆய்யனாறு சாமி...-
அவக எங்க இருக்காருன்னு கொஞ்சம் காமி.
சூடம் வாங்கி தந்தேன்,,,
ஜடமாய் என்னை நிக்க வெச்சுருக்கே.
விளக்கேத்தி வெச்சேன்,,,
என் விளக்க அணைச்சுப் புட்ட.
வேற என்னதான் உனக்கு வேணும் சொல்லு...செய்யுறேன்.
அவகள என் முன்ன காட்டுறேன்னு சொல்லு,,,
உயிரையும் உனக்கு பலி கொடுக்குறேன்.

No comments: