Wednesday, April 15, 2009

உண்மை அறிந்தேன்

மின்னலில் ஏரி வந்தவன்...
உன் பின்னலில் மாட்டி கொண்டேன்.
முன்னாளில் நான் கண்ட கணவு எல்லாம்...
பின்னாளில் நனவாக கண்டேன்.

சொந்த பாதையில் நடந்து வந்தவன்
பாதை மறந்து விட்டேன்.தொலைத்த பாதை தேடி தேடி...
நீ கடந்த பாதையில் பயணம் தொடர்ந்தேன்.
வானமே போதும் என்று வாழ்ந்தவன்...
நிலவை துணைக்கு கேட்கிறேன்.

பகலில் கூட அவள் உதயமாக வேண்டும் என்று வரம் கேற்கின்றேன்.
கவிதை பேசி வந்தவன்...
உன் முன்னாலே பேச திணறுகிறேன்.
அவஸ்தை என்பதை என் ஆயுள் வரமாய் ஏற்று கொண்டேன்.

சொந்த பந்தம் கூடி வந்தவன்...
அகதியாக நிற்கின்றேன்.
உறவு என்று உன் பெயரை ஊருக்கே சொல்கின்றேன்.

கண்களை மூடி கொண்டவன்...
காதலே வேண்டாம் என்று இருந்தேன்.
கண்கள் திறந்து பார்த்தேன்...
கண்கள் மூட மறுக்கின்றேன்.
வயதை பூட்டி வைத்தவன்...
மனதை பூட்டி வைக்க மறந்தேன்.
மனது உன்னை காட்டி கொடுக்க,,,
உன்னில் நான் பூட்டி கொண்டேன்.
நிலவின் வருகை அறிந்து கொண்டவன்...
உன் வருகை உணராதிருந்தேன்.
உயிரில் புகுந்து நீ உறவாடிய போது தான் அதன் உண்மை அறிந்தேன்.

No comments: