Wednesday, April 15, 2009

அழகை அறுவடை செய்தவன்



அழகான சிற்பத்தை செதுக்கியவன் சிற்பி என்றால்...
அழகான உன்னை செதுக்கிய ஆண்டவனும் ஒரு சிற்பி தான்.

கற்பனைகளை குடைந்தெடுத்து அட்சரமாய் தொகுப்பவன் கவிஞன் என்றால்...
தன் கற்பனைகள் முழுதயும் உனக்கென முற்றாக செலவழித்த கர்த்தன் ஒரு மஹா கவிஞன் தான்.

வியக்க வைக்கும் ஒரு காட்சியை வெறும் தூரிகை கொண்டு துவட்டி எடுப்பவன் சிரந்த ஓவியன் என்றால்...
வெறும் வானவில் வன்னமே கொண்டு இந்த உலகமே வியக்கும் வகையில் உன்னை வரைந்த அந்த இறைவனும் ஒரு கை தேர்ந்த ஓவியன் தான்.

எதையும் எதிர்க்க துனிந்தவன் வல்லவன் என்றால்...
பிரம்மோவியமே உன்னை இவ்வளவு பிரம்மாண்டமாய் படைக்க துனிந்து வெற்றி பெற்ற அந்த பிரம்மன் உண்மையில் சகலகலா வல்லவன் தான்.

No comments: