Wednesday, April 15, 2009

சொர்கம் எப்படி இருக்கும்..?

பூக்களால் நெய்த புல் தரைகளாய் படிந்திருக்குமா..?

தேவர்களும் தேவதைகளும் உலா வரும் உல்லாச தலங்கலாக இருக்குமா..?

குலிர் சாதன வசதிகள் கொண்ட விடுதிகள் நிறைந்திருக்குமா..?

வித விதமானே வினோத உணவுகள் அங்கே செய்து தர படுமா..?

போக்குவரத்து நெரிசலே இல்லாத சாலைகள் தென் படுமா..?

போர் தயக்கமே இல்லாதே வழக்கங்கள் அங்கே அனுசரிக்க படுமா..?

தமிழ் மொழி அங்கே உலக மொழியாய் போற்ற படுமா..?


பணம் என்ற பேய்கள் இல்லாத புது பொருளாதாரம் அங்கே கடை பிடிக்கப்படுமா..?


அடிமை என்ற சொல்லே அங்கே வலக்கிலிருந்து அகற்ற படுமா..?

ஜாதி மதம் என்ற கொடிய பேதங்க்கலே இல்லாத வேதங்களின் ஆதிக்கம் கொண்டாட படுமா..?

அரசியல் சாக்கடைகள் தூர்வாரப் பட்ட தொகுதிகலாக தகுதி பெறுமா..?

சொர்கம்.
இப்படி இருக்குமா..?
இல்லை,,,
அப்படி இருக்குமா..?
நேரில் பார்த்தவர்களை நாம் தான் நேரில் பார்க்க முடியுமா..?
சொர்கம் எங்கே என்று தேடுவதை விடு,,,
நீ எதிர் பார்க்கும் சொர்கத்தை உருவாக்க உடன் படு.
உலகத்தை விட ஒரு சொர்கம் வருமா..?

No comments: