Wednesday, April 15, 2009

பிரிவோம் சந்திப்போம்




மண்ணில் ஒரு சொர்க்கம் கண்டோம்...
அந்த கல்லூரி எனும் மலர் சோலையில் தஞ்சம் கொண்டோம்.
பாடம் மட்டும் நாங்கள் அங்கே கற்றுக் கொள்ள வில்லை...
நல்ல பாடமும் சேர்த்து கற்று கொண்டோம்.
ஏட்டுக் கல்வியை மட்டும் பெற்றுக் கொள்ள வில்லை...
வாழ்க்கை கல்வியையும் பெற்று கொண்டோம்.

கல்லூரி களமே...
அன்றும் இன்றும் என்றும்,,,
நீ தான் எங்களுக்கு எல்லாமே.
உன் மடியில் தவழ்ந்த ஒவ்வொரு நாழிகையும் நெஞ்சில் இனிக்குமே.க
ல்லூரி தளமே...
உன்னை நினைக்குக் போதெல்லாம் உள்ளத்தில் கண்ணீர் ஊறுமே.
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியும் உன்னையே சாருமே.

கனமான நட்பின் பரிமாற்றம்...
உயிரான காதலின் உருவாக்கம்...
நினைத்து பார்த்தால் கண்ணீர் சுரக்கும்.

சின்ன வண்ண குறும்புகள்...
செல்லம் கொஞ்சும் சண்டைகள்...
வேறு எங்கு விளையும் இந்த விந்தைகள்..?
இவை அனைத்தயும் வரமாய் தந்தது இந்த கல்லூரி நாட்கள்.

நாம் நடந்த இந்த கல்லூரி தரைகளிள் படிந்திருப்பது...
நம் கனவுகளை சுமந்த காலடி சுவடுகள்.
உயர்ந்திருக்கும் காம்பௌண்ட் சுவர்கள் பதிவு செய்து உரைக்கும்,,,
நாம் பேசிய வார்த்தைகள்.
நூல்களை தவிர நாம் நேர்மையாய் வாசித்தது நன்பர்களின் இதயங்கள்.

எங்கிருந்தோ வந்தோம்...
அறிமுகம் இல்லா முகவரிகளோடு.
ஒன்றாய் இனைந்தொம் இதயத்தின் சுகவரிகளோடு.
இன்று பிரிந்தும் பிரியாதிருக்கிறோம் மறக்க மறுக்கும் நினைவுகளோடு.

கண்கள் நனைகின்றது...
மீண்டும் அந்த வாழ்க்கை வெண்டும் என்று நெஞ்சம் கேட்கின்றது.
ஒரு வேளை நாம் மறந்தால் கூட,,,
நினைக்கச் சொல்லி நினைவுகள் நம்மை அடிக்கின்றது.
அந்த அற்புத நாட்களை எண்ணி எண்ணியே நம் இதயமும் இயல்பாய் துடிக்கின்றது.

பிரிவோம் சந்திப்போம்...
நம் பிரிவை நாம் சந்திப்பதற்க்காக அல்ல.
நாம் பிரிவதே மீண்டும் சந்திப்பதற்க்காக.
பிரிவே இல்லாத வாழ்க்கையை நம் கல்லூரி நினைவுகள் தரும் நிச்சயமாக.

No comments: