Sunday, February 6, 2011

முயலும், ஆமையும்!

மௌனம் சூழ்ந்த ஒரு காடு….

பல் உயிர்களுக்கு அது தான் வீடு.

சில்லென்ற அந்த சூழலோடு,,,

சொல்ல நாங்கள் வந்தோம் கதையோடு.

மெதுவாய் நகரும் ஓர் ஆமை

எத்தூரம் எனினும்,,,

எண்ணி எண்ணி நடக்கும் பொறுமை.

வேகமாய் விரையும் முயலுக்கு

தான் தான் என்ற தற்பெருமை.

அவ்விரு துருவம் சேரும் பொழுதில்,,,

ஓரு புதுமை.


என்னோடு போட்டி போட,,,

இங்கே ஆளிருக்கா..?

ஓட்டுக்குள்ளே பயந்தொளியும் ஆமையே,,,

ஓடி ஜெயிக்க உனக்கு தில் இருக்கா..?

முயலும் சவால் இட

ஆமையும் சம்மதம் தந்தது,,,

சரிசமமாய் போட்டியிட.

வனவாழ் வாசிகள் கூடின,,,

போட்டியை நோட்டம் இட.


நீதிபதியாய் வானரம்...

ஓட்டம் தொடங்கிய நேரம்,,,

மிருகங்களின் ஆரவாரம்.

உட்சாகமாஇ இருவரும்.


முயலோ

எடுத்த எடுப்பில் ஓட்டம்.

நகர்ந்தது ஆமை மட்டும்.

முன்னேறிய முயலுக்கு களைப்பார திட்டம்

ஆமையை கானோமே,,,,

முயலின் எண்ணம் நிறைவேற்றம்.


களைப்பாரப் போன முயலோ

கண் அயர்ந்து போனதென்ன.

கண் விழித்துப் பார்த்த போது,,,

கணவு கானல் நீராய் கலைந்த்தென்ன.


ஆமை முயலை கடந்தது

வெற்றி கோட்டை நுகர்ந்தது.

துறத்தி சென்றும் பயன் இல்லை,,,

மண்னில் முயல் கவிழ்ந்தது.

ஆனவம் அவிழ்ந்தது.

கதையும் முடிந்தது.


கதையை கேட்டோமே

கதையாய் மட்டும் கேட்டோமே

கருத்தை கொஞ்சம் உரித்து பார்ப்போமே.

ஆனவம் ஆகாது நன்பர்களே

அது அழிவுக்கு விட்டிடும் நம்புங்களே.

தற்பெருமை தகாது நன்பர்களே

உண்மை சொன்னால் கேளுங்களே.




No comments: