மெல்லினம் நான்...
இடையினாமாய் காதல் வர...
முடங்கிக் கிடக்கிறேன் கோடையிலே.
பெயர் சொல் கண்ணே...
உன் திருவாயால்,,,
பெயர் சொல் கண்ணே...
எனது உயிரும் மெய்யும் புணரும் ,,,
ஓரிடத்தில் நின்னே.
சுட்டேரிக்குது சுட்டெழுத்து...புனிதப் போருக்கு அயத்தமாகுது ஆயுத எழுத்து...
கேள்விக் கணைகளை பாய்ச்சுதே வினா எழுத்து...
இவை தானோ எனது அன்றாட தலை எழுத்து..?
உயர்தினையா...-நான்
அஃறினையா..?
திணை தெரியாத வினைகளை தாங்கி,,,
பினைப்பிடிக்கப் பட்டிருக்கிறேன்.
இவை யாவும்...
காதல் செய்த செய்வினையா..?
பன்மைகள் ஒருமையாக...
வேற்றுமைகள் ஒற்றுமையாக...
இலக்கணக் காதலுக்கு முற்று என்பது இல்லை,,,
செர்த்தேழுதுவோம் நம் பெயரை ஒன்றாக.
No comments:
Post a Comment