Friday, April 17, 2009

எது நிரந்தரம்..?

நிரந்தரம்...
எது நிரந்தரம்..?
நகர்ந்திடும் இந்த வாழ்க்கையில்...
எது நிரந்தரம்..?
சுழன்றிடும் இந்த பூமியில்...
எது நிரந்தரம்..?

பூமடி தாங்கும் அந்த பனித்துளி நிரந்தரம் தானோ..?
அதிகாலை ஆதவன் வந்து கையோடு கூட்டிக்கொண்டு போய்விடும் தானே..?

பூமிப்பந்தை நனைக்கும் பனித்துளிகள் நிரந்தரம் தானோ..?
மழையின் கருணை கொஞ்ச நேரம் தான்,,,
வந்த வேகத்திலேயே மறைந்திடும் தானே.

சொந்தம்...
பந்தம்...
எல்லாம் நிரந்தரம் தானோ..?
காசு பணம் வந்ததும் மனிதனின் கண்கள் உறவை மறந்திடும் தானே..?

மனிதனின் கதையில் இன்ப துன்பம் நிரந்தரம் தானோ..?
இன்பம் சில காலம்...
துன்பம் சில காலம்...
பருவ காலங்கள் போல மாறி மாறி நம்மை ஆட்டி வைப்பது இவ்விரண்டும் தானே..?

இந்த உடலில் உயிர் நிரந்தரம் தானோ..?
அந்த உயிரை இரவல் தந்த யுவனே அதற்க்கான காலாவிதியையும் வைத்தான்.
உயிர் உடலை விட்டு மீழும் போது,,,
உடல் வெரும் கூடு தானே..?

நிரந்தரம் இல்லா இந்த உலகத்திலே...
வரம் கேட்பது ஏன் தானோ..?
இருப்பதை வைத்துக்கொண்டு,,,
தரமானதாய் நம் வாழ்க்கயை வடிவமைத்துக் கொள்வது நம் கடமை தானே.

No comments: