Friday, April 17, 2009

நட்பின் நெறி




நட்பு ஒரு நல்ல கவிதை...
பேனா முனையில் அது உறங்கிக் கொண்டிருக்கும் வரை.
அட்சரமாய் வந்து விழுந்து விட்டால்,,,
அது குருடன் கையில் கிடைத்த நிலை.

நட்பு ஒரு வீணை...
எந்த கரங்களாவது மீட்டி கொண்டிருக்கும் வரை.
மீட்ட யாரும் இல்லாத வேளையில்,,,
அதன் இருப்பிடம் வீட்டில் ஒரு மூலை.

நட்பு ஒரு பரவச பூக்களின் தோட்டம்...
அது வாடாத வசந்த நாள் வரை.
வாசம் அங்கே குறைந்து விட்டால்,,,
நட்புக்கும் நாளை இங்கில்லை.

நட்பு என் உயிர் நாடி...
நட்பு என் சுவாசம்...
இதன் உண்மை எல்லாம் அதை உறைப்பவனின் வாய் பேச்சு வரை.
இதயத்தை திறந்து பார்த்தால் எச்சில் கறை.

No comments: