Friday, April 17, 2009

நீயா...?



நீயா மலரிலே,,,
தேனை கறந்தது..?
மலரோ,,,
சட்டென விரிந்தது.

நீயா காற்றில்,,,
ஈர பதமாய் புகுந்தது..?
தென்றலும் அதில் குளித்து மகிழ்ந்தது.

நீயா நிலவில்,,,
ஏறி நின்று குடை பிடித்தது..?
அனுதினம் உன் தரிசனம் வேண்டி அது ஒற்றை காலில் நிற்கிறது.

நீயா குயிலுக்கு,,,
பாட கற்று கொடுத்தது..?
உனக்கு குரு வணக்கம் செலுத்தி விட்டு தான் அது பாட துவங்குகிறது.

நீயா கணவில்,,,
என்னை பார்த்து கண் அடித்தது..?
நனவிலும் அது வேண்டும் என்று கண்கள் அடம் பிடிக்கிறது.

நீயா உயிரிலே,,,
கலகம் புரிந்தது..?
என் உயிரோ,,,
என்னை விட்டு விட்டு உன் உயிரோடு வந்து கலந்தது.

No comments: