Friday, April 17, 2009

வியக்க வைக்கும் இயற்கையே.



இயற்கையே...
வியக்க வைக்கும் இயற்கையே.
வெளுக்கச் சொல்லு உன் கிழக்கையே...
அந்தி சிவக்கயிலே அணைக்கச் சொல்லு வான் விளக்கையே.

இரவையும் தந்தாய்...
பகலையும் தந்தாய்...
இந்த உயிர்களுக்கு விருந்தாய்.
நேரம் தாழ்த்தாது இயங்குகிறாயே,,,
உன் கடமை தவறா கடிகாரத்தை நீ எங்கே வாங்கினாய்.

விண்ணிலிருந்து கண்ணடிக்கும் வெள்ளி பூக்கள்...
எண்ணி முடிக்க இயலாமல் தோற்றுப் போவது இன்னும் எத்தனை நாட்கள்..?

தென்றலின் இசைக்கு விருப்பம் போல அபிநயம் பிடிக்கும் விருட்சங்கள்.
பூப்பதும்...
பின்பு உதிர்வதும்.
காய்ப்பதும்...
பின்பு கணிவதும்...
இப்படி கணக்கில்லாத ஆச்சர்யங்கள்.

மண்ணை நனைக்கும் மழை துளி...
வானமும் பூமியும் உறவாடி கொல்லும் இந்த விசித்திரமான வழி.
மேக கூட்டத்தில் எவர் ஒலித்து வைத்தார் இவ்வளவு பெரிய வாலி..?
நடமாடும் பாறைகள் அங்கே நடப்பட்டனவோ,,,
மழையோடு சேர்ந்து பாறைகள் மோதும் பேரொளி.

எண்ணி வைத்தார் போல ஒன்பது கிரகங்கள்...
அவை வலம் வர அதி நவீன சாலைகள்.
பொறியியல் பட்டப் படிப்பு எங்கே நீ கற்றாய்..?
சொல்ல சொல்ல சளிக்கவில்லை இது போன்ற உனது சாதனைகள்.

இவைகளை எல்லாம் விடு...

மனிதன் என்ற மஹா படைப்பு...
இதை போல இல்லை ஒரு பிறப்பு.
சதைகள் கொண்ட இந்த விதைப்பு...
இதற்காகவே நடத்த வேண்டும் உன் திரமையை பாராட்டி ஒரு பட்டமளிப்பு.

இயர்க்கை இயவுளே,,,
இயக்குகிறாய் என் மண்ணை யே...
இயற்றுகிறாய் விண்ணை யே...
ஈடு இனையில்லா அன்னையே,,,
வணங்குகிறோம் உன்னையே.

No comments: