
பொய்யையும் மெல்ல முடியல...
கர்பமாகி போன என் சின்ன இதயத்திலோ,,,
இனி வேறொரு கருதரிக்க வழியில்ல.
காதலிக்கத் தெரிந்த பாவிக்கு,,,
காதலை மொழிய மொழி இல்ல.
ஒப்பிக்கவும் முடியல...
தப்பிக்கவும் முடியல...
ஒப்புதல் வாங்காமல் நுழைந்த காதலுக்கு,,,
தப்பு எதுவென்று தெரியல.
போதுமே...
போதுமே...
நான் பொறுத்தது போதுமே.
வருத்தமாய் சொல்கிறேன்,,,
உன்னிடம் நான் காதலை சொல்லாதது தான் பெரும் பாவமே.
இதயத்தில் வந்து விழும் ஆகாயமே...
உன் பாரம் தாங்காது அழுதிடும் என் மனமே.
மௌனம் என்ற ஒன்று,,,
கடவுள் எனக்காய் தந்த வரமே...
அதுவே எனக்கு விஷமானது தினம் தினமே.
உயிராய் உன்னை நினைத்தவன்,,,
உயிர்வரை சென்று வார்த்தைகள் தேடுகிறேன்.
வார்த்தைகள் இல்லயென்று,,,
கல்லறை தேடுகிறேன்.
கவிதை நூறு எழுதியிருக்கிறேன்...
அகரங்களை அடிவரை தோண்டி எடுத்திருக்கிறேன்...
உன்னை எதிர் கொள்ளும் போது மட்டும் எதுகையும்
No comments:
Post a Comment