Friday, April 17, 2009

இயற்கையே எனது இருக்கை.



நீல வான மேகங்களே...
எனது நிலைமை அறிந்து சொல்லுங்கள்.
காற்றோடு காத்தாட காலங்காத்தாலயே சென்றது,,,
இன்னும் வரவில்லை.

குளிர் ஆடை போர்த்திய ஓடைகள்...
என் கணவை கண்டு பிடித்து சொல்லுங்கள்.
உறக்கத்துக்கு வாக்கப்பட்டு அது போனது,,,
எந்த தகவலும் இல்லை.

கண்கள் எல்லாம் மயங்கி போகும் அளவுக்கு கண்டாங்கி சேலை கட்டி நடந்துப் போகும் அந்தி சூரியனே...
எனது தற்போதைய நிலவரத்தை அறிந்து சொல்லுங்கள்.
அந்தி சாயும் நேரத்தில் நொந்து எங்கோ போனது,,,
ரொம்ப நாளாய் அங்கிருந்து மடல் கூட வரவில்லை.

இயற்கைகளே...
உங்களோடு நான் சமாதியாகி விட்டேன்.
எனக்கும் என் கவிதைகளுக்கும் நண்பர்கள் நீங்கள் தான்,,,
மனிதர்கள் இல்லை.

No comments: